ஒரு கட்டத்தில் தமிழ் ரசிகர்களின் கனவு கன்னியாக இருந்தவர் தான் நடிகர் திரிஷா. பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து முன்னணி நடிகையாக நடித்து ரசிகர்களின் மனங்களில் நீங்காத இடம் பிடித்தவர் தான் திரிஷா.. தமிழ், தெலுங்கு உள்ளிட்ட மொழிகளில் உள்ள முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
பின்னர் சினிமாவில் இளம் நடிகைகளின் அதிகம் வரத் தொடங்கியதால், இவருக்கு படவாய்ப்புகள் குறைந்து போனதாக கூறப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் இவர் நடித்த திரைப்படங்கள் சில தோல்வியை தழுவியதாலும் படங்கள் வாய்ப்பு குறைந்தன என்றும் தெரிகிறது. இதற்கு முக்கிய காரணம் நயன்தாராவை போன்று நடிகைக்கு ஏற்ற படங்களில் ஹீரோயினாக நடிக்க ஆசைப் பட்டது தான்.
தற்போது, தமிழ் சினிமாவில் அசுர வளர்ச்சி பெற்றிருப்பவர் தான் நடிகர் நயன்தாரா. ஆரம்பத்தில் வழக்கமான ஹீரோயின்களை போன்று நடித்து வந்த இவர் தற்போது கதையின் நாயகியாக பல வெற்றித் திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இவர் நடித்த கோலமாவு கோகிலா, மூக்குத்தி அம்மன், நெற்றிக்கண் உள்ளிட்ட பல திரைப்படங்கள் இவருக்கு நல்ல பெயரை பெற்று தந்தது. இதனால் இவர் தற்போது இருக்கும் நடிகைகளிலேயே அதிக சம்பளம் வாங்கும் நடிகையாகயும், லேடி சூப்பர் ஸ்டாராக வலம் வருகிறார்.
இதைப் பார்த்துதான் தற்போது திரிஷா, நயன்தாரா மீது உச்சகட்ட வெறுப்பில் இருப்பதாக கூறப்படுகிறது. நயன்தாராவுக்கு முன்பே தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அப்படி இருக்கும்போது அவருக்கு பின்னால் நடிக்க வந்த நயன்தாரா இன்று புகழின் உச்சியில் இருக்கிறார் என்ற ஆதங்கம் தான் அவரின் கோபத்திற்கு காரணமாம்.
இதனால், திரிஷாவிடம் கதை சொல்ல வரும் இயக்குனர்களிடம் கதை கேட்காமல் நயன்தாராவை பற்றி புலம்பி வருகிறார். நயன்தாரா நடித்து தோல்வி அடைந்த சில படங்களின் பெயர்களை கூறி அவரை எப்படி லேடி சூப்பர் ஸ்டார் என்று சொல்லலாம் என்று கேட்டு வருகிறாராம்.
முன்னர் திரிஷா நடிக்கும் திரைப்படங்களுக்கு எல்லாம் அவருடைய அம்மாதான் கதை கேட்டு முடிவு செய்வார். ஆனால் இப்போது திரிஷாவே நேரடியாக கதையை கேட்க ஆரம்பித்துவிட்டார். எப்படியாவது நயன்தாராவை பின்னுக்கு தள்ளி அந்த இடத்தை பிடிக்க வேண்டும் என்ற நோக்கம்தானாம்..
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
மிங்கிள் ஆன சிங்கிள் இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார்.…
This website uses cookies.