சினிமா / TV

எந்திரனுக்கு முன்னாடியே வெளிவந்த ரோபோ படம்? கூலி பட நடிகர் இப்படி ஒரு படம் எடுத்துருக்காரா?

ஹாலிவுட்டுக்கே சவால் விட்ட திரைப்படம்

2010 ஆம் ஆண்டு ஷங்கரின் இயக்கத்தில் ரஜினிகாந்தின் நடிப்பில் வெளிவந்த “எந்திரன்” திரைப்படம் ஹாலிவுட்டுக்கே சவால் விடும் அளவிற்கான  ரோபோ சம்பந்தப்பட்ட சைன்ஸ் ஃபிக்சனாக அமைந்திருந்தது. இத்திரைப்படம் அக்காலகட்டத்தில் பார்வையாளர்களை படுபயங்கரமாக மிரள வைத்தது என்றே சொல்லலாம். பிரம்மாண்டத்தின் உச்சம் என்பது இதுதான் என பலரும் வியந்து பாராட்டினார்கள். 

இந்த நிலையில் பிரபல கன்னட இயக்குனரும் நடிகருமான உபேந்திரா “எந்திரன்” திரைப்படம் வெளியாவதற்கு 8 வருடங்களுக்கு முன்பே ரோபோ கதையம்சத்தை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கியுள்ளது தெரிய வந்துள்ளது. 

அப்போவே அப்படி!

கன்னடத்தில் 1993 ஆம் ஆண்டு வெளிவந்த “ஷ்” என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக களமிறங்கியவர்தான் உபேந்திரா. இவர் இயக்கிய திரைப்படங்கள் மிகவும் வித்தியாசமான கதைக்களம் கொண்டவை. இவர் பல திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்துள்ளார். இந்த நிலையில்தான் ரஜினிகாந்தின் “கூலி” திரைப்படத்தில் உபேந்திரா ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். 

உபேந்திரா 2002 ஆம் ஆண்டு “ஹாலிவுட்” என்ற ஒரு சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தை இயக்கியிருந்தார். இதில் கதாநாயகன் ஒரு ரோபோவை கண்டுபிடிப்பார். அந்த ரோபோவை கொண்டு ஒரு பெண்ணை கவர திட்டமிடுவார். இறுதியில் அந்த ரோபோ அந்த பெண்ணை காதலித்துவிடும். இதுதான் இப்படத்தின் கதை. 

கிட்டத்தட்ட இதே கதையம்சத்தோடுதான் “எந்திரன்” திரைப்படமும் உருவாகியிருந்தது. எனினும் “எந்திரன்” திரைப்படம் வெளியாவதற்கு 8 ஆண்டுகளுக்கு முன்பே உபேந்திரா “ஹாலிவுட்” என்ற சைன்ஸ் ஃபிக்சன் திரைப்படத்தை இயக்கியுள்ளார். இது பலரையும் ஆச்சரியத்தில் மூழ்கடித்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.