லெஜண்ட் சரவணன் நடித்த “தி லெஜண்ட்” திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமா ரசிகர்களுக்கு பரிச்சயமானவர் ஊர்வசி ரவுதெலா. இவர் ஹிந்தி, தெலுங்கு திரைப்பட உலகில் மிகவும் பிரபலமான நடிகை ஆவார். இந்த நிலையில் இவரது சூட்கேஸ் திருட்டுப்போன சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. அதாவது ஊர்வசி ரவுதெலா லண்டனில் விம்பிள்டன் போட்டியை பார்க்கச் சென்றபோது இச்சம்பவம் நடந்துள்ளது.
அதாவது லண்டனில் விம்பிள்டன் போட்டியை பார்க்கச் சென்ற நிலையில் லண்டனின் கேட்விக் விமான நிலையத்தில் அவரது Christian Dior சூட்கேஸ் காணாமல் போயுள்ளது. விமான நிலையத்தில் லக்கேஜ் பெல்ட்டில் இருந்து அவரது சூட்கேஸ் திருட்டுப்போயுள்ளதாக ஊர்வசி ரதெவுலா தரப்பில் இருந்து கூறப்படுகிறது. அந்த சூட்கேஸிற்குள் ரூ.70 லட்சம் மதிப்புள்ள நகைகள் இருந்துள்ளது.
இந்த சம்பவம் குறித்து எமிரேட்ஸ் நிறுவனம் மற்றும் கேட்விக் விமான நிலைய அதிகாரிகளின் உதவியை நாடியபோது அவர்களிடம் இருந்து சரியான ரெஸ்பான்ஸ் இல்லை என தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் தெரிவித்துள்ளார் ஊர்வசி ரவுதெலா. மேலும் தனது இன்ஸ்டா பக்கத்தில் “பொறுத்துக்கொள்ளப்படும் அநீதி மீண்டும் மீண்டும் நிகழும் அநீதிக்கு ஒப்பாகும்” எனவும் குறிப்பிட்டுள்ளார். ஊர்வசி ரவுதெலாவின் சூட்கேஸ் திருடப்பட்ட சம்பவத்தை குறித்து லண்டன் போலீசார் விசாரணை நடத்தி வருவதாக கூறப்படுகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.