2020 ஆம் ஆண்டே வெற்றிமாறன் சூர்யாவை வைத்து ஒரு திரைப்படத்தை இயக்கவுள்ளதாக அறிவிக்கப்பட்டது. மேலும் அத்திரைப்படம் “வாடிவாசல்” நாவலை மையமாக வைத்து உருவாகவுள்ளதாகவும் கூறப்பட்டது.
அதன்படி “வாடிவாசல்” என்ற டைட்டிலோடு இத்திரைப்படம் அறிவிக்கப்பட்டது. ஆனால் 4 ஆண்டுகள் ஆகியும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கபடாமலே இருந்தது. சூர்யா “கங்குவா” திரைப்படத்திலும் வெற்றிமாறன் “விடுதலை” திரைப்படத்திலும் பிசியாகி விட்டனர். எனினும் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு எப்போது தொடங்கும் என ரசிகர்கள் பலரும் எதிர்பார்த்து காத்துக்கொண்டிருந்தனர்.
இந்த நிலையில்தான் கடந்த பொங்கல் பண்டிகையை முன்னிட்டு தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு சூர்யா, வெற்றிமாறன் ஆகியோருடன் இணைந்து எடுத்த புகைப்படத்தை தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்து “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்று அறிவித்தார். இதனை தொடர்ந்து இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஜூன் மாதம் தொடங்கும் என ஒரு பேட்டியில் தாணு கூறினார்.
ஆனால் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்து மாதம் 8 ஆம் தேதி தொடங்கப்பட உள்ளதாக ஒரு புதிய தகவல் ஒன்று வெளிவந்துள்ளது. ஜூன் மாதம் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று தாணு அறிவித்திருந்த நிலையில் இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு தற்போது ஆகஸ்து மாதத்திற்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
திருமணமானவுடன் தனது பிறந்நாளை சரக்கு பார்ட்டியுடன் பிரியங்கா கொண்டாடிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது. இதையும் படியுங்க: தலைக்கேறிய மது…
சமீபத்தில் அஜித்தின் குட் பேட் அக்லி படம் வெளியானது. ரசிகர்கள் மத்தியில் வரவேற்பை பெற்ற இந்த படம் வசூலில் பட்டையை…
தொடங்கியது சீசன் 6 தமிழர்களின் ஸ்ட்ரெஸ் பஸ்டராக திகழ்ந்து வரும் குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் 6 ஆவது சீசன்…
கார்த்தி-தமன்னா ஜோடி “பையா” திரைப்படத்தில் தமன்னாவோட ஏற்பட்ட கெமிஸ்ட்ரி அதனை தொடர்ந்து கார்த்திக்கு வேறு எந்த நடிகையுடனும் ஏற்படவில்லை என்றே…
பாரதிய ஜனதா கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன் தூத்துக்குடி விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்தார். இதையும் படியுங்க: இட்லி…
This website uses cookies.