கடந்த 2004ஆம் ஆண்டு தனுஷுக்கும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த்திருக்கும் நவம்பர் 18ஆம் தேதி திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிகளுக்கு யாத்ரா மற்றும் லிங்கா என்ற இரண்டு மகன்கள் இருக்கிறார்கள்.
தனுஷ் மற்றும் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இருவருக்கும் பிறந்த இரண்டு மகன்களை ரஜினிக்கு ரொம்பவும் பிடிக்கும். அதனால் தன்னுடைய பேரன்களை தன் முன்னே வைத்துக் கொள்ள வேண்டும் என்ற ரஜினி ஆசைப்பட்டார்.
தனுஷ் ஐஸ்வர்யா இருவரும் கடந்த ஆண்டு தங்களுடைய விவாகரத்தை அறிவித்தவர். திடீரென இருவரும் தங்களுடைய விவாகரத்தை அறிவித்ததால், அனைவரும் அதிர்ச்சியடைந்தார்கள்.
இவர்களுடைய விவாகரத்துக்கு என்ன காரணம் என்று இதுவரை தெரியவில்லை. பல காரணங்கள் கூறப்பட்டு வரும் நிலையில், கமல் ஹாசன் மகள் ஸ்ருதி ஹாசன் தான் இவர்களுடைய விவாகரத்துக்கு காரணமாக இருந்துள்ளார் என கிசுகிசுக்கப்படுகிறது.
இருவரும் பிரிந்த நிலையில், தனுஷின் செயல்பாடுகள் மற்றும் மேடைப் பேச்சுகள் அனைத்தும் ஐஸ்வர்யாவை ஏதாவது ஒரு வகையில் நினைவுபடுத்தும் விதமாக அமைந்து வருகிறது.
இந்த நிலையில், அண்மையில் நடைபெற்ற வாத்தி படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கூட, அப்படத்தின் பாடலை பாடி அசத்தினார் தனுஷ். பிறகு, ரசிகர்களிடம் பேசிய அவர், “எனக்காக இங்கு வந்திருக்கும் உங்களுக்கு என்னால் எதையும் செய்ய முடியாது. ஆனால், பாடல் வேண்டுமானால் பாடுகிறேன்,” எனக் கூறினார்.
இதனால், ரசிகர்கள் பெரிதும் மகிழ்ச்சியடைந்தனர். இந்த சூழலில், அவர் இதற்கு முந்தைய படமான திருச்சிற்றம்பலத்தில், ‘நிஜமா நான் செய்த பாவம்,’ என்ற பாடலை பாடி மீண்டும் முனுமுனுப்புகளை உருவாக்கியுள்ளார்.
தனுஷ் பாடிய ஹிட்டான எத்தனையோ பாடல்கள் இருக்க, இந்தப் பாடலை அவர் பாடுவதற்கு காரணம் என்ன..? என்று கேள்வி எழுப்பி வருகின்றனர்.
தவெக தலைவர் கடந்த 2024 ஆம் ஆண்டு தமிழக வெற்றிக் கழகம் என்ற சொந்த அரசியல் கட்சியைத் தொடங்கிய நிலையில்…
மதுரையில் அமைக்கப்பட உள்ள எய்ம்ஸ் மருத்துவமனை குறித்து 3D வீடியோ ஒன்றை மத்திய அரசு வெளியிட்டது இது குறித்து விமர்சனம்…
STR 49 “தக் லைஃப்” திரைப்படத்தை தொடர்ந்து சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில்…
மதுரை நாடாளுமன்ற உறுப்பினர் சு. வெங்கடேசன் செவ்வாயன்று மகபூ பாளையத்தில் உள்ள மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியில் மாவட்ட குழு அலுவலகத்தில்…
கொரோனா பரவல் காரணமாக கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் 2022ஆம் வருடங்களில் இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களில் ஊரடங்கு…
சுமாரான வரவேற்பை பெற்ற படம் மணிரத்னம் இயக்கத்தில் கமல்ஹாசன், சிம்பு, திரிஷா, அபிராமி, அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட…
This website uses cookies.