தமிழ் சினிமாவில் கவுண்டமணி – செந்தில்க்கு அடுத்தபடியாக காமெடி நடிகராக மிக பிரபலமாக திகழ்ந்து வந்தவர் நடிகர் வடிவேலு. ரஜினி, கமல், விஜயகாந்த், விஜய், விக்ரம் என முன்னணி நடிகர்கள் படத்தில் நடித்து தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை பெற்றவர். சில வருடங்களுக்கு முன், எதிர்பாராத விதமாக, சில காரணங்களுக்காக, சினிமாவில் நடிக்க தடை விதித்து இவருக்கு ரெட் கார்ட் கொடுக்கப்பட்டது.
பின்னர், தடையை நீக்கியதற்கு பின், 4 வருடங்களுக்கு பிறகு, மீண்டும் ரீஎண்ட்ரி கொடுத்து, படங்களில் கமிட்டாகி நடித்து வருகிறார். சமீபத்தில், இவர் கதாநாயகனாக நடித்து வெளியான நாய் சேகர் ரிட்டர்ன்ஸ் படம் வெளியாகி சுமாரான விமர்சனத்தை பெற்றது. சந்திரமுகி 2, மாமன்னன் போன்ற திரைப்படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், வடிவேலு எவ்வளவு தான் காமெடி ஜாம்பவானாக இருந்து காமெடியில் கலக்கினாலும் சில சர்ச்சைகளிலும் சிக்கி வந்துள்ளார்.
வாய்ப்பு தேடி வரும் பல நடிகைகளுக்கு வாய்ப்பு கொடுத்துள்ளாராம். சில இயக்குனருக்கு சிபாரிசும் செய்து வடிவேலு உதவி இருக்கிறார். அதிலும் மார்க்கெட் இழந்த நடிகைகளுக்கு தன் படத்தில் கண்டீஷன் போட்டுத்தான் நடிக்க வைப்பாராம். அதிலும் வாய்ப்பு தேடி வரும் நடிகைகளுக்கு உதவி செய்யும் போது சில அட்ஜெஸ்ட்மெண்ட்களையும் நடிகைகளிடம் வடிவேலு எதிர்ப்பார்ப்பார் என தகவல் வெளியாகி உள்ளது.
அதேசமயம் நடிகர் வடிவேலு 8 மணிக்கு மேல் நடிக்க மாட்டேன் என்றும், தன் படத்தில் நடிக்கும் நடிகைகளை பண்ணை வீட்டிற்கு அழைத்து செல்வதை வழக்கமாக வைத்து இருந்தாராம்.
அப்படி நடிகர் வடிவேலு சின்னத்திரை நடிகை உள்ளிட்ட முன்னணி நடிகைகளுடன் சில பல சில்மிஷம் செய்து வருவதாக சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் தெரிவித்துள்ளார்.
அப்படி ஸ்ரேயா சரண், பிரியா பவானி சங்கர், சதா, ஷிவானி உள்ளிட்ட நடிகைகள் இந்த லிஸ்ட்டில் இருப்பதாகவும் சினிமா விமர்சகர் வித்தகன் சேகர் மறைமுகமாக தெரிவித்துள்ளார்.
இவர்களை தன் படத்தில் நடிக்க வைக்க பல லட்சக்கணக்கில் சம்பளமும் வாங்கி நடிகர் வடிவேலு கொடுத்திருக்கிறார். மேலும், வடிவேலுவின் ஆரம்பகால படம் ஒன்றில் அவருடன் நடனமாடிய ஒரு நடிகைக்கு சொல்லாமல் உதட்டில் முத்தம் கொடுத்தது கூட சர்ச்சையானது குறிப்பிடத்தக்கது.
அதை கண்டுகொள்ளாமல் அந்த நடிகையும் சிரித்துள்ளார் என்றும் அந்த சமயத்தில் கூறப்பட்டது. மேலும், இடைப்பட்ட காலத்தில் ரெட்கார்ட் போடப்பட்டு நடிகர் வடிவேலு ஆளே காணாமல் போன நிலையில், சமீபத்தில் ரீஎண்ட்ரி கொடுத்தார்.
இருந்தாலும் நாய் சேகர் ரீட்டன்ஸ் படம் படுதோல்வியை கொடுத்தது. ஆனால் அப்படத்தில் நடிகை ஷிவானியை வைத்து நடிகர் வடிவேலு கவர்ச்சியை காட்டச்சொல்லியிருக்கிறார்.
ஆக்சன் கிங் சூர்யா? கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்த “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது.…
ஆக்சன் அதகளம்… கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் சூர்யா நடித்துள்ள “ரெட்ரோ” திரைப்படம் நேற்று மே தினத்தை முன்னிட்டு வெளியானது. முழுக்க…
விஜய் டிவியில் கலகலப்பான தொகுப்பாளராக வலம் வந்தவர் பிரியங்கா தேஷ்பாண்டே. ஆரம்பத்தில ஒரு சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கிய இவர்,…
கணவருடன் ஏற்பட்ட பிரச்னையால் கயல் சீரியல் நடிகை தற்கொலைக்கு முயன்றதாக வெளியான தகவல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. சன் டிவியில் பிரைம்…
சூர்யா நடிப்பில் கார்த்திக் சுப்புராஜ் இயக்கத்தில் நேற்று உலகம் முழுவதும் வெளியான படம் ரெட்ரோ. சூர்யாவின் கங்குவா படத்திற்கு பிறகு…
ரசிகர்களை கவர்ந்த டீசர் சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் நாளை மே தினத்தை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம்…
This website uses cookies.