இன்னொரு வாட்டி என்ன மாதிரி நடிச்ச…. பிரபல நடிகரை ஆள் வச்சி அடித்து கொலை மிரட்டல் விடுத்த வடிவேலு!

தமிழ் சினிமாவில் ஒரு காலத்தில் முன்னணி காமெடியன் என்ற இடத்தை தக்க வைத்திருந்தவர் நடிகர் வடிவேலு. அடுத்தடுத்த படம், உச்ச நடிகர்களுடன் வாய்ப்பு , மளமளவென உயர்ந்த சம்பளம் இது எல்லாம் தலைக்கணமாகிவிட்டது. அதன் பின்னர் படப்பிடிப்புக்கு சரியான நேரத்திற்கு போகாமல் டகால் அடிப்பது, பணத்தை வாங்கிவிட்டு ஒரு பேச்சு பேசுவது, தன்னைவிட்டால் வேறு யாரும் இல்லை என திமிர் காட்டுவது என இருந்து வந்தார்.

இதனால் வடிவேலுவுக்கு தொடர்ந்து திரைப்பட வாய்ப்புகள் கிடைக்காமல் சில ஆண்டுகள் சினிமாவி விட்டு ஒதுங்கியே இருந்தார். மேலும் தன்னுடன் நடிகர் நடிகர்களை வளரவிடாமல் கொடுமைப்படுத்தியதாக பலர் பேட்டிகளில் கூறியிருக்கிறார்கள். அப்படித்தான் தற்போது பிரபல காமெடி நடிகர் காதல் சுகுமார் வடிவேலு குறித்து பேட்டி ஒன்றில் ஒரு பரபரப்பான சம்பவத்தை கூறி பேரதிர்ச்சி கொடுத்துள்ளார்.

அதாவது, வடிவேலு உடல்நிலை சரியில்லாமல் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அப்போது நான் வடிவேலு சார் மாதிரி ஒரு படத்தில் நடித்திருந்தேன். அந்த காமெடி மக்கள் மத்தியில் மிகப்பெரிய அளவில் பேசப்பட்டது. அதன் பின் ஒரு நாள், வடிவேலு சார் அந்த காமெடி பார்த்துவிட்டு என்னை அழைத்துவர சொல்லி முத்துக்காளை, போண்டா மணி ஆகியோரை அனுப்பி வைத்தார்.

நானும் சந்திசோஷமாக வடிவேலு சார் பார்க்க போனேன். முதலில் என் நடிப்பை பாராட்டிய அவர் “என் வயித்துல பொறந்தவன் மாதிரி இருக்கான்னு என் ஆத்தா சொல்லுவாங்க, என்று வடிவேலு என்னிடம் சொன்னாரு. பின்னர் அங்கிருந்த போண்டாமணி, முத்துக்காளை ரெண்டு பரையும் வெளியில் போக சொல்லிவிட்டு ” ஒவ்வொரு கம்பெனியா போய், என்னை மாதிரி நடிப்பேன்னு சொல்றியாமேன்னு கேட்டாரு . சினிமாவுல நடிக்கமாட்டேனு சொல்லிட்டு நடிக்குற என பேசிக்கொண்டே பின்னாடி இருந்து ஒருவர் அடித்தார்.

நான் என்ன? என்று கேட்டதும் எதிர்த்து பேசுறியான்னு அடிச்சாங்க ஏதோ திட்டமிட்டு பண்ண பாக்குறாங்க என்று நினைத்து நான் இனிமேல் படங்களில் நடிக்கவே மாட்டேன் விட்டுவிடுங்கள் என பயந்து ஊருக்கே ஓடிவிட்டேன். பின்னர் படவாய்ப்புகள் எதுவுமே கிடைக்கவில்லை. இதனால் மிகுந்த மனஉளைச்சலுக்கு ஆளாகி தற்கொலை செய்துக்கொள்ளலாம் என நினைத்தேன் என் மனைவி தான் எனக்கு ஆறுதலாக இருந்தார் என காதல் சுகுமார் கூறியுள்ளார். தன்னை போல் நடித்தார் என்பதற்காக வடிவேலு இவ்வளவு மோசமாக நடந்துக்கொண்டாரா? என கோலிவுட்டே அதிர்ந்துவிட்டது.

Ramya Shree

Recent Posts

நித்யானந்தா இந்த நாட்டில்தான் இருக்கிறார்- நீதிமன்றத்தில் சீக்ரெட்டை போட்டுடைத்த சீடர்!

2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…

2 hours ago

படம் வெளியாகனும்னா இதை பண்ணிதான் ஆகணும்- ஆமிர்கானுக்கு ஆர்டர் போட்ட சென்சார் போர்டு?

ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…

4 hours ago

ஆங்கிலம் பேசுபவர்களே! இதை எழுதி வச்சிக்கோங்க- சவால் விட்ட அமித்ஷா!

டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…

4 hours ago

தக் லைஃப் படத்துக்கு முட்டுக்கட்டை போட்டால் கிரிமினல் வழக்கு?- உச்சநீதிமன்றம் அதிரடி

தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…

5 hours ago

குபேரா படத்தில் இத்தனை வெட்டுக்களா? படத்தில் அப்படி என்னதான் பிரச்சனை!

சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…

6 hours ago

24 மணிநேரமும் டாஸ்மாக், நீ குடிச்சே செத்துப்போ- திமுக முன்னாள் எம்எல்ஏ  சர்ச்சை பேச்சு…

“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…

6 hours ago

This website uses cookies.