தமிழ் சினிமாவில் யாரும் எட்டக்கூடமுடியாத வகையில் மிகப்பெரிய காமெடி நடிகராக வலம் வந்தவர் வைகைப்புயல் வடிவேலு. தமிழ் சினிமாவின் தவிர்க்க முடியாத நகைச்சுவை நடிகரான இவர் எப்படிபட்ட காமெடியாக இருந்தாலும் தனது பாடி லேங்குவேஜ் மூலம் நிலைநிறுத்திடுவார்.
ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார்.
`என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.
அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது. தற்போது அவர் உதயநிதி ஸ்டாலின் உடன் மாமன்னன் படத்தில் நடித்து வருகிறார்.
இந்நிலையில் பிரபல காமெடி நடிகர் பாவா லக்ஷ்மணன் பேட்டி ஒன்றில் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்களை கூறியுள்ளார். வடிவேலு மிகவும் மோசமானவர். அவர் யாருக்கும் உதவிகள் செய்யமாட்டார். வாய்ப்பு கேட்டு அவர் வீட்டுக்கு சென்றாலும் வாய்க்கு வந்தபடியெலாம் திட்டி அனுப்பிடுவார். நாய் சேகர் படத்தில் நடிக்க அவரிடம் வாய்ப்பு கேட்டு போனதற்கு எதற்கு வந்தாய்? வெளியே போ? வராதே? என்று தான் முகத்தில் அடித்தது போல் சொன்னார்.
எனக்கு மயிலசாமி அண்ணா தான் நிறைய உதவிகள் செய்துள்ளார். சுகர் மாத்திரை, மருந்துகள் வாங்க கூட அவர் தான் பணம் கொடுப்பார். இனிமே யாரிடம் போய் நான் நிற்பேன் என உருக்கமாக கூறினார். வடிவேலு எந்த உதவியும் செஞ்சதில்லையா? என கேட்டதற்கு, அல்வா வாசு மதுரையில் இறந்தார். அப்போது வடிவேலு மதுரையில் இருந்தும் அவரை போய் பார்க்கவில்லை. அப்படி இரும்போது எனக்கு மட்டும் என செய்திடப்போறார்? நான் சந்திக்கவே கூடாது என்று நினைக்கும் நபர்களில் வடிவேலு ஒருவர். அவர் பெயரை கூட சொல்ல விரும்பவில்லை என கூறினார். தொடர்ந்து பல காமெடி நடிகர்கள் வடிவேலு மீது அடுக்கடுக்கான புகார்கள் கூறி வருவது சர்ச்சை கிளப்பியுள்ளது.
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
பொள்ளாச்சி அருகே உள்ள ஆனைமலை பேரூராட்சிக்குட்பட்ட 18 வார்டுகளில் சுமார் 50,000 க்கு மேற்பட்ட பொதுமக்கள் வசித்து வருகின்றனர், இதையும்…
புரட்சி இயக்குனர் “பரியேறும் பெருமாள்” என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ் சினிமாவையே திரும்பி பார்க்க வைத்தவர் மாரி செல்வராஜ். தனது…
கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…
This website uses cookies.