தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களாக ஜொலித்தவர்கள் கவுண்டமணி செந்தில்,இவர்களுடைய காம்போவிற்கு இன்றும் ரசிகர் பட்டாளம் உள்ளது.இவர்கள் தமிழ் சினிமாவில் உச்சத்தில் இருந்த போது தான் நடிகர் வடிவேல் தன்னுடைய பயணத்தை தொடங்குகிறார்.
இதையும் படியுங்க: தாறுமாறான வசூல் வேட்டையில் ‘குடும்பஸ்தன்’…வெற்றிப்பாதையில் படக்குழு.!
அந்த சமயத்தில் தமிழ் சினிமாவில் சிறு பட்ஜெட்டில் குடும்பங்கள் கொண்டாடும் வெற்றிப்படங்களை கொடுத்தவர் இயக்குனர் V.சேகர்,இவர் இயக்கிய நான் பெத்த மகனே திரைப்படத்தின் போது நடந்த பல சுவாரஸ்ய தகவல்களை யூடியூப் சேனல் ஒன்றில் பகிர்ந்துள்ளார்.
அதில் ‘நான் பெத்த மகனே’ திரைப்படத்தின் போது ஷூட்டிங் நடைபெறும் இடத்திற்கு தன்னுடைய புது காரில் வந்த வடிவேல்,கவுண்டமணி மற்றும் செந்தில் கார்களை இடிப்பது போல் சென்று நிறுத்தியுள்ளார்,அதுமட்டுமில்லாமல் கவுண்டமணி கண் முன்னே இயக்குனர் V.சேகரை காரில் வைத்து ரவுண்ட் அடித்துள்ளார்.
இதனை பார்த்த கவுண்டமணி,இயக்குனரிடம் சென்று அங்கே பாருங்க,இப்போ வந்த பையன் அவன்,என் கார இடிக்குற மாதிரி போறான்,இவன உடனே படத்தில இருந்து தூக்குங்க என்று கூறியுள்ளார்,அதற்கு இயக்குனர் V.சேகர் அட்வான்ஸ் கொடுத்துவிட்டேன்,கொஞ்சோ பொறுத்துக்கோங்க என்று கூறியுள்ளார்.
வடிவேலின் அடாவடி செயலால்,கவுண்டமணி மற்றும் செந்தில் அடுத்ததாக V.சேகர் இயக்கிய ‘காலம் மாறி போச்சு’ திரைப்படத்தில் வடிவேலுடன் நடிக்க மாட்டேன் என்று விலகியுள்ளனர்.அதன் பிறகு வடிவேலுடன் சேர்ந்து நடிப்பதை தவிர்த்து வந்ததாக தெரிவித்திருப்பார்.மேலும் தன்னுடைய படங்களில் முன்னணி நடிகைகளை வைத்து எப்படி ஹிட் கொடுத்தேன் என்ற ரகசியத்தையும் இயக்குனர் V.சேகர் அந்த பேட்டியில் கூறியிருப்பார்.
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
This website uses cookies.