சினிமா / TV

நீ நடிச்சது போதும் கிளம்பு..வடிவேலுவை துரத்திவிட்ட பாரதிராஜா..எந்த படம்னு தெரியுமா.!

அதிக சம்பளம் கேட்ட வடிவேலு

தமிழ் சினிமாவின் முன்னணி நகைச்சுவை நடிகர்களில் ஒருவராக விளங்கும் வடிவேலு,தனது தனித்துவமான நடிப்பு மற்றும் உடல் மொழியால் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தார்.

இதையும் படியுங்க: ‘டிராகன்’ ஹீரோயினுக்கு அடித்த லக்..அலேக்கா தூக்கிய மன்மத ஹீரோ.!

ஆரம்ப காலத்தில் பல சவால்களை சந்தித்த இவர் ஒருமுறை
பாரதிராஜா இயக்கிய ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படத்தில் நடிக்க வடிவேலு அதிக சம்பளம் கேட்டதால்,அவரை இயக்குநர் பாரதிராஜா படத்தில் இருந்து நீக்கி விட்டதாக தகவல் தற்போது இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.

அந்தக் காலத்தில் இப்படத்திற்காக மிகப்பெரிய பட்ஜெட் ஒதுக்கியிருந்த தயாரிப்பாளர் கலைப்புலி எஸ்.தாணு, இதில் வடிவேலுவை நடிக்க வைக்க திட்டமிட்டிருந்தார். ஆனால்,படம் பெரிய பட்ஜெட்டில் தயாராகும் என்பதால்,தனது சம்பளத்தையும் அதிகரிக்க வேண்டும் என்று முடிவெடுத்த வடிவேலு 25,000 சம்பளம் கேட்டாராம்.

இதனால் கோபமடைந்த பாரதிராஜா “நீ நடிக்கவே வேண்டாம் கிளம்பு” என்று கூறி அவரை அனுப்பி வைத்தார்.

இதனால் மனமுடைந்து,கண்ணீருடன் வெளியில் வந்த வடிவேலுவிடம் தயாரிப்பாளர் தாணு என்ன ஆச்சு? என்று கேட்டுள்ளார்.வடிவேலு நடந்ததை கூறிய பிறகு, அவர் கேட்ட படியே 25,000 சம்பளம் வழங்கி இனிமேல் சம்பள விஷயத்தை என்கிட்ட கேள்” என்று சமாதானப்படுத்தி,அவரை படத்தில் நடிக்க வைக்க ஏற்பாடு செய்தார்.

இந்த சம்பவத்திற்குப் பிறகு ‘கிழக்கு சீமையிலே’ திரைப்படம் வடிவேலுவின் திரையுலக வாழ்க்கையில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது.

வடிவேலு படங்களில் நகைச்சுவை நடிகராக மக்களை சிரிக்க வைத்தாலும்,அவரின் உண்மை முகம் திரையுலகில் பணியாற்றும் சிலர் மத்தியில் மாறுபட்ட விதத்தில் பேசப்பட்டு வருகிறது,அவர் கூட நடித்த சக நடிகர்கள் எல்லோரும் அவரை பற்றி எதிர்மறையான கருத்துக்களை மட்டுமே தெரிவித்து வருகின்றனர்,ஆனால் வடிவேல் எதையும் பொருட்படுத்தாமல் அவர் தொடர்ந்து வெற்றிகரமான படங்களில் நடித்து வருகிறார்.தற்போது அவர் கைவசம் ‘கேங்கர்ஸ்’ மற்றும் ‘மாரீசன்’ போன்ற முக்கியமான திரைப்படங்கள் உள்ளன.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.