மது அருந்திவிட்டு புலம்பித் தள்ளும் வடிவேலு.. அரசியல்வாதி சொன்ன அதிர்ச்சி தகவல்..!

விஜயகாந்தின் மறைவு செய்தி அறிந்த வடிவேலு ஒரு இரங்கல் கூட தெரிவிக்கவில்லை என்றும், நேரில் வந்து அஞ்சலி செலுத்தாது ஏன் என்கிற கேள்விகளும் ஒரு பக்கம் எழுந்து வருகிறது. வடிவேலுவுடன் பணியாற்றின் நடிகர்களின் இரங்கலுக்கு போகாததால் அவர் மீது பட விமர்சனங்களும் எழுந்து வருகிறது.

இந்நிலையில், மறைந்த நடிகர் விஜயகாந்த்திற்கும் வடிவேலுக்கும் இடையே சண்டை இருப்பது தமிழக மக்கள் அறிந்த விஷயம் தான். இருவருக்கும் இடையே சண்டை இருப்பதை அறியும் பலருக்கு எதனால் இவர்கள் இருவருக்கும் இடையே இவ்வளவு பெரிய விரிசல் ஏற்பட்டது என்ற காரணம் தெரியாது.

அது என்னவென்று, தற்போது இந்த பதிவில் பார்க்கலாம். அதாவது, இது குறித்து பேசிய விஜயகாந்தின் நெருங்கிய நண்பர்களில் ஒருவரான நடிகர் தியாகு கூறியதாவது, ஒரு நாள் விஜயகாந்த் வக்கீல் இறந்துவிட்டார். வடிவேலுவின் வீட்டிற்கு எதிரே தான் விஜயகாந்தின் வக்கீல் வீடு இருந்திருக்கிறது. வக்கீல் வீட்டிற்கு துக்கம் விசாரிக்க வந்த சிலர் வடிவேலுவின் வீட்டிற்கு அருகே வண்டிகளை பார்க் செய்திருக்கிறார்கள்.

இதை சாதாரண விஷயமாக பொறுத்துக் கொள்ளாத வடிவில் என் வீட்டு பக்கம் ஏன் வண்டி நிறுத்துறீங்க எல்லா வண்டியில் எடுங்க என கேவலமாக சத்தம் போட்டுள்ளார். சாவு வீட்டுக்கு வந்தவங்க கொஞ்ச நேரத்துல கிளம்பிடுவாங்க அதுவரைக்கும் கூட பொறுத்துக்க கூடாதா இப்படி கொச்சையா பேசுறியே இது நியாயமா என கேட்டனர்.

இதன்பின் அங்கு கலவர சூழல் ஏற்பட்டுள்ளது. இதன்பின் உடனடியாக எனக்கு போன் செய்து விஜயகாந்த் ஆட்கள் என்னிடம் வம்பு இழுக்கிறாங்க எனக்கூறி பொய் புகார் செய்தார். பிறகு இந்த விஷயம் அன்று முதல்வராக இருந்த கருணாநிதி காதுக்கு சென்றது. விஜயகாந்தை பழிவாங்க திமுகவிற்கு வடிவேலு பிரச்சாரம் செய்ததற்கு இந்த சம்பவம்தான் காரணமாம். இதனால் தான் அவர் விஜயகாந்தின் இறப்பிற்கு கூட அஞ்சலி செலுத்த வரவில்லை என்று கூறப்படுகிறது.

இந்நிலையில், என்னதான் இருந்தாலும் இது ஒரு காரணமாக ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை என பலரும் தெரிவித்து வருகின்றனர். அவர் எவ்வளவு உதவிகள் செய்திருக்கிறார். அதை மறந்துவிட்டு இறப்பில் கூட வந்து பார்க்காதது மோசமான மனுஷன் வடிவேலு என்பதை தான் வெளிப்படுத்துகிறது என கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், வடிவேலுவின் நண்பரும் வீசிக நிர்வாகியுமான மாலின் ஒரு பேட்டியில் விஜயகாந்த் மறைவுக்கு நேரில் சென்றால் அசம்பாவிதம் ஏற்படும் என்பதாலேயே அவர் செல்லவில்லையே தவிர மற்றபடி எந்த காரணமும் இல்லை என விளக்கம் அளித்துள்ளார். மேலும், விஜயகாந்த் உடலுக்கு நேரில் அஞ்சலி செலுத்த முடியாமல் போனதால் குற்ற உணர்ச்சி ஏற்பட்டு தொடர்ச்சியாக வடிவேலு மது அருந்தி விஜயகாந்த் குறித்து புலம்பி வருவதாகவும், சினிமா வட்டாரங்களில் முணுமுணுக்கப்பட்டு வருகிறது.

Poorni

Recent Posts

நாடாளுமன்றத்தை ஸ்தம்பிக்கச் செய்வோம் : திருச்சி சிவா எம்.பி எச்சரிக்கை!

கீழடி தமிழர் தாய்மடி எனும் தலைப்பில் திமுக மாணவர் அணி சார்பாக மதுரை விரகனூர் சுற்றுச்சாலை அருகே மத்திய அரசைக்…

18 minutes ago

கர்நாடகாவில் தக் லைஃப் வெளியீடு? ஒரு பயனும் இல்லை- பேட்டியில் வாய்விட்ட பிரபல தயாரிப்பாளர்!

மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன் “தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது”…

1 hour ago

பேருந்து சக்கரத்தில் சிக்கிய இளைஞர்… அலறிய பயணிகள் : கோவை காந்திபுரத்தில் அதிர்ச்சி!

கோவை காந்திபுரம் பேருந்து நிலையத்தில் இருந்து சிவானந்தா காலனிக்கு செல்லும் தனியார் பேருந்து ஒன்று இன்று காலை 8 மணிக்கு…

1 hour ago

இவர் வாய் விட்டால் விளங்குமா? குபேரா படத்துக்கு முதல் விமர்சனத்தை அள்ளித் தெளித்த பிரபலம்!

தனுஷின் குபேரா சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் வருகிற ஜூன் 20…

2 hours ago

விவசாயிகளுக்கு ஆதரவாக களமிறங்கும் அதிமுக.. திமுக அரசுக்கு எதிராக வெளியான அறிவிப்பு..!

திமுக அரசுக்கு எதிராக விவசாயிகளுடன் இணைந்து அதிமுக உண்ணாவிரத போராட்டத்தை அறிவித்துள்ளது. இதையும் படியுங்க: மாயமான 28 வயது பெண்…

3 hours ago

பிச்சை எடுத்துப் பாருங்க அருமை புரியும்- நயன்தாராவை டார்கெட் செய்தாரா தனுஷ்?

நயன்தாரா VS தனுஷ் கடந்த நவம்பர் மாதம் நயன்தாரா-விக்னேஷ் சிவன் திருமண நிகழ்வு “நயன்தாரா பியாண்ட் தி ஃபேரி டேல்”…

3 hours ago

This website uses cookies.