என்ன மீறி எப்படி நீ நடிக்கலாம்னு மூஞ்சிலே அடிச்சாரு… மட்டமான ஆளு வடிவேலு – கிழித்த பிரபலம்!

காமெடி உலகின் ஜாம்பவாக இருந்து வரும் வடிவேலு தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோக்கள் கூட இவருடைய கால்ஷீட்டுக்காக வரிசையில் நிற்கும் அளவுக்கு ரசிகர்களிடையே மிகப்பெரிய வரவேற்பு பெற்று இருந்தார். குறிப்பாக இவரது டயலாக் டெலிவிரி, பாடி லேங்குவேஜ் உள்ளிட்டவரை சிறப்பம்சம் வாய்ந்தவையாக பார்க்கப்படும். வடிவேலுவின் காமெடிகளால் மட்டுமே ஓடிய திரைப்படங்களும் உண்டு. ஒரு சில படங்களில் இவர் ஹீரோவாகவும் நடித்தார்.

ஒவ்வொரு தலைமுறைக்கும் ஒவ்வொரு நகைச்சுவை நடிகர்கள் மாறுவது வழக்கம். ஆனால் வடிவேலுவுக்குப் பின் அடுத்தாக இவர் என சொல்ல முடியாத அளவுக்கு அவர் இருந்து வருகிறார். நடிகர் ராஜ்கிரண் தான் வடிவேலுவை தமிழ் சினிமாவில் அறிமுகம் செய்துவைத்தார். `என் தங்கை கல்யாணி’ படம் மூலம் சிறிய பாத்திரத்தில் தன் பயணத்தைத் துவங்கிய வடிவேலு தொடர்ந்து என் ராசாவின் மனசிலே, சின்ன கவுண்டர், சிங்கார வேலன், தேவர் மகன், காதலன், காதலர் தேசம் என தொன்னூறுகளின் இறுதியில் கவனிக்கப்படும் முகமாக மாறினார்.

அதன் பின்னர் , ரஜினி ,கமல் , அஜித், விஜய், பிரசாந்த் என பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்திருக்கிறார். இதனிடையே சமீப நாட்களாக நடிகர் வடிவேலு குறித்து அடுக்கடுக்கான புகார்கள் வந்த வண்ணம் உள்ளது. பணத்திமிரு, நான் தான் என்ற தலைக்கனம் உள்ளிட்டவை வடிவேலுவின் வாழ்க்கையை இன்னும் அழித்துக்கொண்டு தான் இருக்கிறது.

இந்நிலையில் பிரபல பத்திரிக்கையாளர் செய்யாறு பாலு பேட்டி ஒன்றில் வடிவேலு தன்னுடன் நடிக்கும் சக நடிகர்களை வளரவே விடமாட்டார். அதையும் மீறி அவர்கள் performer செய்தால் அவர்களை ஸ்பாட்டிலே அடித்து கொடுமை படுத்துவார் என கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறார். அப்படித்தான் ஒரு முறை சிங்கமுத்துவுடன் ” சாராயம் காய்ச்சும் ஒரு லேடியை பிடிக்க செல்லும்போது பின்னால் இருக்கும் ஒரு நபர் சிறப்பாக நடித்ததை மானிட்டரில் சென்று பார்த்தார். பின்னர் மீண்டும் வந்து நடித்த வடிவேலு அவரை முகத்தில் பளார் பளார் என அறைத்து என்ன performance’ அ பண்ற நீ performance? என கேட்டு அடித்தார். அந்த அளவிற்கு அடுத்தவர்கள் வளரவே கூடாது என கெட்ட எண்ணம் பிடித்தவர் வடிவேலு என அவர் கூறினார் .

Ramya Shree

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

19 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

20 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

20 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

21 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

22 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

22 hours ago

This website uses cookies.