சினிமா / TV

நல்லா இருக்கு ஆனா வேண்டாம்- வடிவேலுவை அசிங்கப்படுத்திய பிரபல இயக்குனர்!

எல்லாம் ஸ்பாட்ல வர்ரது

பொதுவாக ஒரு திரைப்படத்தில் இடம்பெறும் காட்சியை படமாக்க ஸ்கிரிப்ட் படி செல்வதுதான் வழக்கம். பெரும்பாலும் பல இயக்குனர்கள் இதனை கடைபிடிப்பது உண்டு. ஆனால் கவுண்டமணி-செந்தில், விவேக், வடிவேலு, சந்தானம், யோகி பாபு ஆகியோர் இடம்பெறும் காமெடி காட்சிகள் பெரும்பாலும் ஸ்கிரிப்ட்டில் எழுதபட்டதை தாண்டியும் அந்த காட்சி படமாக்கப்படும்போது சில கூடுதல் சுவாரஸ்யங்களை சேர்த்துக்கொண்டே அந்த காட்சியை வளர்த்தெடுப்பதுதான் வழக்கம். 

நாம் பார்க்கும் பல காமெடி காட்சிகள் அவ்வாறு படப்பிடிப்புத் தளத்தில் வளர்த்தெடுக்கப்பட்டதுதான். இதனை ஆங்கிலத்தில் “On the spot improvisation” என்று கூறுகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட வடிவேலு, தன்னை ஒரு பிரபல இயக்குனர் ஸ்கிரிப்ட்படி பேச சொல்லி ஆணையிட்டது குறித்த ஒரு சம்பவத்தை பகிர்ந்துகொண்டுள்ளார்.

நல்லா இருக்கு ஆனால் வேண்டாம்!

“நகைச்சுவை என்பது கல்வெட்டு கிடையாது. ஒரு முறை ஒரு பெரிய இயக்குனரின் படத்தில் நடித்தேன். நான் காட்சியை சொல்ல சொல்ல சிரித்துக்கொண்டே இருந்தார். ‘நல்லா இருக்கு, ஆனால் பேப்பரில் டைப் செய்த வசனங்களை மட்டும் பேசுங்கள்’ என்று கூறினார். அப்படியா அப்போ டெவெலப் பண்ணக்கூடாதா? என்று கேட்டேன். இல்லை, வேண்டாம் என்ன எழுதியிருக்கிறதோ அதனை மட்டும் செய்யுங்கள் என்று கூறினார்.

அவர் பெரிய இயக்குனர். அவருக்கும் எனக்கும்தான் சமீபத்தில் சண்டை நடந்தது. அவரால்தான் இரண்டு மூன்று வருடங்கள் என்னால் நடிக்க முடியாமல் போனது. உங்களுக்கு தெரிந்திருக்கும், அவர் பெயர் சொல்ல நான் விரும்பவில்லை” என வடிவேலு தனக்கு நடந்த சம்பவத்தை கூறினார். 

வடிவேலு “இம்சை அரசன் 24 ஆம் புலிகேசி” திரைப்படத்தில் ஒப்பந்தம் செய்யப்பட்டு சரியாக ஒத்துழைப்பு தர மறுக்கிறார் என அத்திரைப்படத்தின் தயாரிப்பாளரான ஷங்கர் புகார் அளித்ததை தொடர்ந்து வடிவேலுவுக்கு ரெட் கார்டு கொடுக்கப்பட்டது கூடுதல் தகவல். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.