தனது ரசிகர் ஒருவரின் திருமணத்திற்காக மதுரைக்குச் சென்றிருந்தபோதுதான் வடிவேலுவை முதன்முதலில் சந்தித்தார் ராஜ்கிரண். மீண்டும் சென்னைக்கு ரயில் ஏற வெகு நேரம் இருந்த நிலையில் அவருக்கு பொழுதுபோவதற்காக வடிவேலுவை அவரது அறைக்கு அனுப்பினார்கள்.
வடிவேலு அங்கு ராஜ்கிரணை தனது நகைச்சுவை கலந்த நடிப்பால் சிரிக்க வைத்தார். இவரது திறமையை மனதில் வைத்துதான் ராஜ்கிரண் “என் ராசாவின் மனசிலே” திரைப்படத்தில் நடிக்கவைத்தார். அதனை தொடர்ந்து வடிவேலுவின் கெரியர் உச்சத்திற்கு சென்றது.
இந்த நிலையில் “கேங்கரஸ்” திரைப்படத்திற்காக வடிவேலு சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர் “உங்களுக்கும் ராஜ்கிரணுக்குமான உறவு எப்படிப்பட்டது?” என கேட்டார்.
அதற்கு வடிவேலு, “இதை பல நாட்களாக வெளியே சொல்லவேண்டும் என நினைத்தேன். இப்போது சொல்கிறேன். இந்த திரையுலகில் என்னை நான்கு வருடங்கள் தன்னுடைய அலுவலகத்திலேயே வைத்துக்கொண்டு என்னை வாழவைத்தவர் அவர்தான். அவருக்கு பிறகு ஆர்.வி.உதயகுமாரிடம் சென்றுவிட்டேன்” என கூறினார்.
மேலும் பேசிய அவர், “ஊரில் இருந்து சினிமாவுக்கு வரும்போது வேஷ்டி, சட்டை, பேண்ட்டோடுதான் வந்தேன். நான் அம்மணமாகவெல்லாம் வரவில்லை. இங்க வந்து பார்த்தால் வேட்டி சட்டை வாங்கிக்கொடுத்தார், டவுசர் வாங்கிக்கொடுத்தார், தாலாட்டினார் என்று என்னென்னமோ பேச ஆரம்பித்துவிட்டார்கள். ஆனாலும் சினிமாவில் என்னை நிலைத்து நிற்கவைத்தவர் ராஜ்கிரண்தான்” என்றும் அவர் கூறினார். வடிவேலு பேசிய இந்த வீடியோ இணையத்தில் வைரல் ஆகி வருகிறது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.