சினிமா / TV

என்னயே திட்டிட்டீயா…உனக்கு எதுக்கு சோறு…வடிவேலுவின் கொடூரம்.!

வடிவேலுவின் கொடூர முகம்

தமிழ் சினிமாவில் தன்னுடைய காமெடியால் பலரை சிரிக்க வைத்த வடிவேல் நிஜ வாழ்க்கையில் பலருடைய சாபத்திற்கு ஆளாகி வருகிறார்,இவர் கூட நடித்த பல துணை நடிகர்கள் சமூக வலைதளத்தில் வடிவேலுவின் உண்மை முகத்தை வெளிப்படையாக பேசி உடைத்து வருகின்றனர்.

இதையும் படியுங்க: சும்மா அதிருதுல்ல…24 மணி நேரத்தில் ‘குட் பேட் அக்லி’ பிரம்மாண்ட சாதனை.!

அந்த வகையில் பிரபல நகைச்சுவை நடிகரான பெஞ்சமின் அளித்துள்ள பேட்டியில் வடிவேலு கூட சேர்ந்து நான் நடித்த போது ஒரு தடவை என்ன அவர் சாப்பிடக்கூடாது என்று சொன்னதைவிட,என்னுடைய தட்டை தூக்கி வீசி கொடூரமாக நடந்து கொண்டார் என்று பேசியுள்ளார்.

நாடகங்களில் மூலம் தன்னுடைய பயணத்தை தொடங்கி சினிமாவில் எப்படியாவது நடிக்க வேண்டும்னு பல தடவை போராடிய அவருக்கு இயக்குனர் சேரன் வெற்றிக்கொடிகட்டு படத்தில் வாய்ப்பு கொடுத்தார்.

அந்த படத்தில் வடிவேலு முக்கிய ரோலில் நடித்திருப்பார்,அவருக்கு மச்சானாக பெஞ்சமின் நடித்திருப்பார்,அப்போது ஒரு காட்சியில் வடிவேலு துபாயில் இருந்து வரும் போது அவரை கெட்ட வார்த்தையால் திட்டுவார்,இப்போதும் அந்த காட்சியை டிவியில் ரசிகர்கள் பார்த்தால் வாய்விட்டு சிரிக்கின்றனர்,ஆனால் அதே காட்சி தான் பெஞ்சமினுக்கு சோகமாக அமைந்துள்ளது.

வெற்றிகொடிக்கட்டு படத்தின் ஷூட்டிங் போது வடிவேலுவை நான் திட்டுற காட்சி இருந்ததால் என்னை ரொம்ப டார்ச்சர் செய்தார்,அதன் பிறகு என்னை திட்டுற அளவுக்கு நீ பெரிய ஆளா..நீ எப்படி ஊருக்கு போறன்னு பார்க்குறேன்,மேலும் அந்த காட்சியை படத்தில் இருந்து நீக்குங்கள் என்று இயக்குனரிடம் வாதாடினார்.

அப்போது ஒரு நாள் படப்பிடிப்பு போது தட்டை எடுத்து சாப்பிட போனேன்,அப்போது அங்கே வந்த ஒருவர் என்னோட தட்டை பிடுங்கி தூக்கி எறிந்தார்,அவரிடம் நானும் இந்த படத்துல நடித்துள்ளேன் என கூறினேன்,அதற்கு நடிச்சிருந்தா சாப்புடுவியா,இன்னைக்கு 20 பேருக்கு தான் சாப்பாடு,நீ கிளம்பி போ என்று வெளியே தள்ளினார்கள்.

ஒரு வாய் சாப்பாடு சாப்பிட கூட எனக்கு அருகதையா இல்லையா என்று கண்ணீரோடு வெளியே வந்தேன் என மனம் உடைஞ்சு அந்த பேட்டியில் பேசியிருப்பார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.