தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.
இந்நிலையில், சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை வடிவுக்கரசி பேசியுள்ளார். கன்னிப்பருவத்திலே என்ற படத்திற்காக 30 நாள் ஷூட்டிங்க்கிற்கு, திருச்சிக்கு சென்றதாகவும், தனக்கு டயலாக் எல்லாமே பாக்யராஜ் தான் சொல்லிக் கொடுத்ததாகவும், அப்போது பிரவீனாவுக்கும் பாக்கியராஜுக்கும் காதல் பற்றிய விஷயங்கள் ஓடிக்கொண்டு இருந்தது.
அந்த சமயத்தில், தன்னை பார்க்க வருவது போல் பாக்கியராஜ் பிரவீனாவை பார்பார் என்றும், பாக்கியராஜ் யாராவது ஒரு பெண்ணிடம் பேசினால் உடனே பிரவீனாக்கு சொல்லிவிடும் வேலையை தான் செய்து வந்ததாகவும், தனக்கு மட்டுமே அம்பாசிடர் கார் கொடுத்து அனுப்புவார்கள்.
அப்போது பாக்யராஜ் சாரை காரில் ஏற்றிக்கொண்டு சென்றபோது பிரவீனாவை பற்றி பேசிக்கொண்டே வருவார். இதை சிலர் ராஜ்கிரன் சாருக்கு கால் செய்து வடிவுகரசியும், பாக்யராஜும் காதல் பண்றாங்க என்று போட்டு கொடுத்து விட்டனர்.
ஒரு நாள் நைட் ஒரு காட்சி எடுக்கும் போது ராஜ்கிரண் இங்க அவ அவ என் காசுல எல்லோரும் ஹனிமூன் கொண்டாடுறீங்களான்னு கோபத்தில் கேட்டார். உடனே தான் அங்கிருந்த ஷேரை எடுத்து தூக்கி வீசி, கத்தியதால், தன்னை பற்றி அப்போதைய செய்திகளில் வடிவ கரசிக்கு பேய் பிடித்து விட்டதாக சொல்லிவிட்டார்கள். அப்போது அந்த செய்தி பெரிய அளவில் பேசப்பட்டது என்று வடிவுக்கரசி பேட்டியில் தெரிவித்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.