தமிழ் சினிமாவில் பிரபல நடிகையான வடிவுக்கரசி தமிழ், தெலுங்கு, கன்னடம் மற்றும் மலையாளம் மொழிகளில் சுமார் 350 க்கும் மேற்பட்ட திரைப்படங்களில் நடித்து பெரும் புகழ் பெற்றிருக்கிறார். அத்துடன் பல்வேறு தொலைக்காட்சி தொடர்களிலும் நடித்திருக்கிறார். 1979ல் வெளியான கன்னிப் பருவத்திலே என்ற திரைப்படத்தில் நடித்து அறிமுகம் ஆனார். இப்படத்தில் வடிவுக்கரசி நடிகர் ராஜேஷுடன் கதாநாயகியாக நடித்திருந்தார்.
சினிமாவில் நடிக்க ஆரம்பித்த காலங்களில் கதாநாயகியாகவும், பின்னர் முன்னணி நடிகர்கள் பலருடனும் தாய், சகோதரி போன்ற கதாபாத்திரங்களும் ஏற்று நடித்திருக்கிறார். பின்னர் வில்லி கதாபாத்திரங்களில் நடித்து வந்த வடிவுக்கரசி மிகப்பெரிய அளவில் கவனம் ஈர்த்தார். குறிப்பாக ரஜினியின் அருணாச்சலம் திரைப்படத்தில் கிழவியாக நடித்து மிரட்டினார்.
இந்நிலையில் சமீபத்திய பேட்டி ஒன்றில் தனது திரைப்பயண அனுபவங்களை குறித்து பகிர்ந்துக்கொண்டார். அப்போது பாரதிராஜாவின் இயக்கத்தில் தான் ஒரு படத்தில் கமிட் ஆகி ஷூட்டிங்கிற்கு சென்ற பிறகு” நடிகர் விஜயகுமாருக்கு நீங்க ஜோடி என்று தானே கூறினேன். ஆனால் இப்போ சொல்றேன் விஜயகுமாருக்கு ஜோடியே வேண்டாம் அப்போ தான் நல்லா இருக்கும் என கதையை மாற்றி கூறினார்.
என்னது நான் ஹீரோயின் இல்லையா? யோவ்… இதை முன்னாடியே சொல்லவேண்டியதானே என கேட்டேன். அதற்கு அவர் நேத்து நைட் தான் இப்படி மாத்தி யோசித்தேன் என கூறினார். நான் உடனே விஜயகுமாருக்கு ஜோடியாக மஞ்சுளாவை போடப்போறாங்களோ என நினைத்துக்ண்டு ” எவ பேச்சை கேட்டு இப்படி பண்றீங்க. ” இல்லை எவள இந்த ரோலுக்கு போடப்போறீங்க”?
என ரொம்ப மோசமாக அவரை திட்டிவிட்டு உன் படத்தில் நடிக்கவே முடியாது என கூறிவிட்டு அங்கிருந்து அப்போவே கிளம்பி வீட்டுக்கு வந்துவிட்டேன். அதன் பின்னர் ரஜினியின் வீரா திரைப்படத்தில் அவருக்கு அம்மாவாக நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. எனவே ஒன்று நம்மை விட்டு சென்றால் அதை விட சிறந்த விஷயம் அமையும் என வடிவுக்கரசி கூறியுள்ளார். இந்த பிளாஷ்பேக் சம்பவம் தற்போது வைரலாகி வருகிறது.
https://www.facebook.com/watch/?v=956692442425435&ref=sharing
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.