இயக்குனர் வெங்கட் பிரபுவின் சகோதரரான பிரேம்ஜி அமரன் “வல்லவன்” திரைப்படத்தில் ஒரு சிறு கதாபாத்திரத்தில் நடித்திருந்தார். அதனை தொடர்ந்து அவர் நடித்த “சென்னை 28” திரைப்படம் அவரை மிகவும் பிரபலமாக ஆக்கியது. இதனை தொடர்ந்து வெங்கட் பிரபு இயக்கிய அனைத்து திரைப்படங்களிலும் அவர் தவறாமல் இடம்பெற்றிருந்தார். மேலும் சமீபத்தில் “சத்ய சோதனை”, “வல்லமை” போன்ற திரைப்படங்களில் கதாநாயகனாகவும் நடித்திருந்தார்.
இவர் நடிகர் மட்டுமல்லாது சிறந்த இசையமைப்பாளரும் கூட. “துணிச்சல்”, “நெஞ்சத்தை கிள்ளாதே”, “ஜோம்பி”, “ஆர் கே நகர்”, “மன்மத லீலை” போன்ற பல திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார். பல ஆண்டுகளாக திருமணமே ஆகாமல் சிங்கிளாக வலம் வந்த பிரேம்ஜி சமீபத்தில் இந்து என்ற பெண்ணை திருமணம் செய்துகொண்டார். பல ஆண்டுகளாகவே முரட்டு சிங்கிள் என்று கூறிக்கொண்டிருந்த இவர், திருமணம் செய்துகொண்டது தமிழ்நாட்டைச் சேர்ந்த பலருக்கும் ஆச்சரியத்தை கொடுத்தது.
இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட நடிகர் வைபவ், பிரேம்ஜியுடனான ஒரு சம்பவத்தை நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார்.
Gpay அறிமுகமான புதிதில் ஒரு நாள் பிரேம்ஜி அமரன், வைபவிடம் “Gpay என்றால் என்ன?” என்று கேட்டாராம். அதற்கு வைபவ், “Gpay என்றால் என்ன என்று தெரியாதா?” என்று கேட்டுவிட்டு தனது மொபைலை எடுத்து Gpayக்குள் சென்று Gpay-வை பற்றி விளக்கினாராம்.
அப்போது பிரேம்ஜி, “இதில் இருந்து எப்படி காசு அனுப்புவது?” என கேட்க, அதற்கு வைபவ், “இங்க பாருடா” என்று ரூ.5000 பிரேம்ஜி நம்பருக்கு Gpay செய்துவிட்டு, “இவ்வளவுதான்டா” என்று சொன்னாராம். அவ்வாறு சொல்லிவிட்டு அப்படியே கிளம்பிவிட்டாராம் வைபவ். அடுத்த நாள்தான் தான் ரூ.5000 பரிவர்த்தனை செய்தது வைபவிற்கு ஞாபகம் வந்ததாம். அந்த பணத்தை பிரேம்ஜி திருப்பி தரவே இல்லையாம். இந்த சம்பவத்தை அப்பேட்டியில் நகைச்சுவையாக பகிர்ந்துகொண்டார் வைபவ்.
ஆர்ஜே பாலாஜி-சூர்யா கூட்டணி “எல்கேஜி”, “மூக்குத்தி அம்மன்” ஆகிய திரைப்படங்களை தொடர்ந்து ஆர்ஜே பாலாஜி சூர்யாவை வைத்து புதிய திரைப்படம்…
தற்போது என்ன பொருள் வேண்டுமானாலும் ஆன்லைனில் ஆர்டர் செய்தால் போதும் வீடு தேடியே வந்துவிடும். இதையும் படியுங்க: இளைஞருக்கு இப்படி…
தெலுங்கு இயக்குநர் சேகர் கம்முலா இயக்கத்தில் நேரடி தெலுங்கு படத்தில் முதன்முறையாக தனுஷ் நடித்துள்ள திரைப்படம் குபேரா. நேற்று இந்த…
3 மணி நேரத் திரைப்படம் சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா ஆகியோரின் நடிப்பில் உருவான “குபேரா”…
புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட அம்மாபட்டினம் கடைத்தெருவில் நேற்று இரவு மின்சார கம்பி அறுந்து விழுந்துள்ளது. இதையும்…
கரூர், தென்னிலை அருகே, இரண்டு சிறுமிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த, கூலி தொழிலாளியை போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து…
This website uses cookies.