தமிழ் சினிமா உலகில் புகழ்பெற்ற திரைப்பட பாடலாசிரியராக திகழ்பவர் கவிஞர் வைரமுத்து. நிழல்கள் எனும் திரைப்படத்தில் பொன்மாலைப்பொழுது என்ற பாடலின் மூலம் தான் இவர் சினிமா துறையில் அறிமுகமாகி இருந்தார். அதனைத் தொடர்ந்து இவர் பல படங்களில் பாடல்களை எழுதி இருக்கிறார். மேலும், இவர் இதுவரை 7000 பாடல்களுக்கு மேல் எழுதி இருக்கிறார்.
இப்படி புகழின் உச்சத்தில் இருந்த கவிஞர் வைரமுத்து மீது பின்னணி பாடகி சின்மயி பாலியல் குற்றச்சாட்டு சாட்டி இருந்தது பலருக்கும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருந்தது. இதைத்தொடர்ந்து பல பெண்களும் கவிஞர் வைரமுத்து மீது செக்ஸ் புகார்களை அளித்து இருந்தார்கள். பிறகு வைரமுத்து குறித்து பல விமர்சனங்களை சின்மயி எழுப்பி இருந்தார். இருந்தாலும் பலர் வைரமுத்துக்கு ஆதரவாக குரல் கொடுத்து இருந்தார்கள். ஆனால், பாடகி சின்மயி கூறும் குற்றச்சாட்டில் உண்மை இருக்கிறதா? என்று சிலர் சந்தேகித்தும் வருகின்றனர்.
இந்நிலையில், வைரமுத்து பல படங்களுக்கு பாடல்கள் எழுதி, டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதிய பாடல் வரியை நாம் பார்க்கலாம்.
2017 -ம் ஆண்டு மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் வெளியான காற்று வெளியிடை படத்தில் இடம் பெற்றுள்ள சாரட்டு வண்டியில் பாடலில் “ஆணுக்கோ பத்து நிமிஷம் பொண்ணுக்கோ அஞ்சு நிமிஷம்” என்ற வரிகள் அமைந்திருக்கும். இது டபுள் மீனிங் அர்த்தங்களுடன் எழுதப்பட்டு இருக்கும்.
இதனிடையே, நடிகர் அஜித் குமார் சசி இயக்கத்தில் வெளியான அசல் படத்தில் பாவனாவிற்கும் அஜித்துக்கும் ரொமான்டிக் பாடல் அமைந்து இருக்கும். அந்த பாடலில் இரட்டை அர்த்தத்துடன் இருக்கும். “பூங்காவில் மழை வந்ததும், புதர் ஒன்று குடை ஆனதும், மழை வந்து நனைக்காமலே மடி மட்டும் நனைந்தாய் மறந்தது என்ன கதை” என்ற வரியை” வைரமுத்து இரட்டை அர்த்தங்களுடன் எழுதி இருப்பார்.
பிரசாந்த் ஐஸ்வர்யா ராய் நடிப்பில் 1998 -ம் ஆண்டு ஜீன்ஸ் திரைப்படம் வெளியானது. இதில் அன்பே அன்பே என்ற பாடல் இடம் பெற்று இருக்கும். இந்த பாடல் இரட்டை அர்த்தத்தில் வைரமுத்து எழுதியிருப்பார். “பெண்ணே உனது மெல்லிடை பார்த்தேன் அடடா பிரம்மன் கஞ்சனடி சற்றே நிமிர்ந்தேன் தலை சுற்றி போனேன் ஆஹா அவனே வள்ளலடி” என இடம் பெற்று இருக்கும்.
திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ராஜலட்சுமி…
நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…
இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…
தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…
கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…
அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…
This website uses cookies.