நடிகை வாணி போஜன் சினிமாவிற்கு வருவதற்கு முன்னர் கிங்ஃபிஷர் ஏர்லைன்சில் பணிப்பெண்ணாக 3 ஆண்டுகள் பணிபுரிந்தார். இவர் இந்த துறைக்கு வருவதற்கு முன்னர் மாடல் அழகியாக தனது கெரியரை ஆரம்பித்தார். அதன் மூலம் கிடைத்தது தான் சீரியல் வாய்ப்புகள்.
விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ஆஹா தொடரில் அறிமுகம் ஆனார். தொடர்ந்து ஜெயா டிவியில் மாயா, சன் தொலைக்காட்சியில் தெய்வமகள் என நடித்தார். இதில் தெய்வமகள் சீரியல் அவருக்கு மிகப்பெரும் அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது.
அதன் பின்னர் அசோக் செல்வன் நடிப்பில் வெளியான ஓ மை கடவுளே படத்தில் மீரா அக்காவாக நடித்து அனைவரையும் கவர்ந்தார். தொடர்ந்து படங்களில் நடித்து வருகிறார்.
இந்நிலையில், சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வாணி போஜன் பல விசயங்களை பார்த்து கோபப்பட்டு ரியாக்ஷன் செய்துள்ளார். ஒரு செய்தியில் வாணி போஜன் புகைப்படத்தோடு வேறொருவர்களின் புகைப்படத்தை சேர்ந்து பகிர்ந்திருக்கும் போட்டோவை பார்த்து தான் அது இல்லை என்று தெரிவித்து இருக்கிறார்.
மேலும், தான் எந்த ஹீரோவோடு சேர்ந்து நடித்தாலும் காதல்ன்னு எழுதுராங்க, பெரிய ஹீரோவோடு எழுதுங்க என்று காமெடியாக தெரிவித்துள்ளார். அசோக் செல்வன் என் தம்பி மாதிரி, ஜெய்யுடன் காசிப்ஸ் வரும் போது லிவ்விங் ரிலேஷன்ஷிப்பில் இருக்காரு என்பது ரொம்ப சீப்பான விசயம், லோன் கட்டி வீடு கட்டி இருக்கேன் என்று ஆதங்கத்துடன் வாணி போஜன் தெரிவித்திருக்கிறார்.
மதுரை புறநகர் கிழக்கு மாவட்டத்திலுள்ள மதுரை கிழக்கு (தெற்கு) ஒன்றிய கழகத்தின் சார்பில் பூத் கமிட்டி கிளைக் கழக கூட்டம்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற “முத்த மழை” பாடலை தமிழில் பாடகி தீ பாடியிருந்தார். எனினும்…
தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை வெளியிட்டுள்ள X தளப்பதிவில், தஞ்சாவூர் மாவட்டத்தில், தனியார் சர்க்கரை ஆலையில், கரும்பு கொள்முதலுக்கான…
ரசிகர்களுக்கான படம் அஜித்குமார் நடிப்பில் ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் கடந்த ஏப்ரல் மாதம் வெளிவந்த “குட் பேட் அக்லி” திரைப்படம்…
திருப்பூரில் செய்தியாளர்களை சந்தித்த தமிழ்நாடு பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை, தேர்தல் வர வர எல்லா கட்சியும் தங்கள் கொள்கைகளை…
பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகை விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி சின்னத்திரை ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்ற தொடர் “பாண்டியன் ஸ்டோர்ஸ்”.…
This website uses cookies.