நீ தாயே இல்ல… மேடையில் அசிங்கப்படுத்திய மகன் – கதறி அழுத வனிதா!

கமல்ஹாசன் தொகுத்து வழங்கிய பிக் பாஸ் நிகழ்ச்சி மூலம் தனக்கான மிகப்பெரிய அடையாளத்தை ஏற்படுத்தி கொண்டவர் தான் வனிதா விஜயகுமார். முன்னதாக இவர் திரைப்படங்களில் நடித்திருந்தாலும் கூட அவ்வளவாக மக்களுக்கு பரீச்சயமாகவில்லை. இந்த நிகழ்ச்சி தான் அவருக்கு மிகப்பெரிய அளவில் அடையாளத்தை ஏற்படுத்திக் கொடுத்தது.

இதற்கு முன்னர் தனது தந்தை விஜயகுமாருடன் சொத்து தகராறில் வனிதா சண்டையிட்டதால் மிகப்பெரிய சர்ச்சைக்குரிய நடிகையாக பார்க்கப்பட்டார். இதனால் அந்த குடும்பத்திலிருந்து வனிதா ஒதுக்கி வைக்கப்பட்டார். அவர் தனது இரண்டு மகள்களுடன் தனியாகத்தான் வசித்து வருகிறார் . அவரது மகனான ஸ்ரீ ஹரி தனது தாத்தா விஜயகுமார் உடன் தான் வளர்ந்து வருகிறார் .

இந்நிலையில் வனிதாவின் மகன் ஸ்ரீ ஹரி சினிமாவில் ஹீரோவாக அறிமுகமாகி இருக்கிறார். பிரபு சாலமோன் இயக்கத்தில் “மேம்பூ” என்ற திரைப்படத்தில் இவர் ஹீரோவாக கமிட் ஆகி இருக்கிறார். இப்படத்தின் டைட்டில் லாஞ்ச் அண்மையில் நடைபெற்றது. அப்போது ஸ்ரீஹரி தனது தாத்தாவுடன் இந்த நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். ஸ்ரீஹரி எந்த ஒரு இடத்திலும் வனிதாவை தனது தாயாக அங்கீகரித்துப் பேசவே இல்லை. இது சமூக வலைதளங்களில் வைரலாகி பேசும் பொருளாகியது.

இந்நிலையில் எந்த ஒரு தாய்க்கும் இப்படி ஒரு நிலை வரக்கூடாது என வனிதா மிகவும் வேதனையோடு வருத்தத்தோடு பதிவு ஒன்றை போட்டுள்ளார்.அதில், “என்னுடைய குழந்தை இன்று ஒரு ஹீரோவாக வளர்ந்துள்ளதை நினைத்து பெருமை கொள்கிறேன். மீடியா நண்பர்கள் எல்லோரும் எனக்கு எப்படி ஆதரவு கொடுத்தீர்களோ அதே போல் என்னுடைய மகனுக்கும் ஆதரவை கொடுக்க கேட்டுக் கொள்கிறேன்.

அவருக்கு உரிய வாழ்த்துக்களையும் ஆசீர்வாதங்களையும் கொடுக்க வேண்டும். இவ்வளவு பெரிய வாய்ப்பை கொடுத்த பிரபு சாலமோனுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள். மேலும் ரஜினிகாந்த் மாமாவின் வழிகாட்டுதலின்படி என்னுடைய மகன் திரையில் வெற்றி நடை போடுவார். என் மகன் திரையில் மிகப்பெரிய வெற்றியை காண தண்ணீர் மல்க சந்தோஷத்தோடு இறைவனை வேண்டிக்கொள்கிறேன் என மிகவும் உருக்கமாக பதிவிட்டுள்ளார்.

முன்னதாக ஸ்ரீஹரி வனிதாவை விட்டு பிரிந்த சமயத்தில்….நான் வனிதா விஜயகுமாரின் மகன் அல்ல ஆகாஷின் மகன் எனக் கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. தற்போது வனிதா ஒரு தாயாக ஏக்கத்துடன் மகனைக் குறித்து பதிவிட்டு வாழ்த்தியுள்ளதை பலரும் பாராட்டி அவருக்கு ஆறுதல்களை தெரிவித்து வருகிறார்கள்.

Anitha

Recent Posts

வீட்டு சுவர் ஏறி விசாரணை நடத்திய போலீஸ் : சரமாரிக் கேள்வி கேட்ட பெண்… ஷாக் வீடியோ!

திருப்பத்தூர் மாவட்டம் ஜோலார்பேட்டை அடுத்த குருமன்ஸ் காலனி பகுதியைச் சேர்ந்த ராஜி இவருடைய மனைவி லட்சுமி இவர்களுக்கு ‌ ராஜலட்சுமி…

19 hours ago

எங்க வரலாற்றை மறைக்கிறீங்க?- வம்பாக பேசி சர்ச்சையில் சிக்கிக்கொண்ட மாதவன்! ஏனப்பா இப்படி?

நீக்கப்பட்ட முகலாயர்கள் வரலாறு ஒன்றிய அரசின் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுன்சில் (NCERT) 7 ஆம் வகுப்பு…

20 hours ago

கமல்ஹாசனை புறக்கணித்த ஒன்றிய அரசு? அவர் இல்லாம சினிமா விழாவா? கொந்தளிக்கும் ரசிகர்கள்!

இந்திய சினிமாவின் அகராதி இந்திய சினிமா வரலாற்றை கமல்ஹாசனை தவிர்த்துவிட்டு எழுதமுடியாது. உலகளவிலான தொழில்நுட்பங்களை இந்திய சினிமாவிற்கு அறிமுகப்படுத்தியவர் கமல்ஹாசனே.…

21 hours ago

பூஜா ஹெக்டே ராசியில்லாத நடிகையா? அப்போ ஜனநாயகன் கதி?

தென்னிந்தியாவில் தற்போது புகழ்பெற்ற நடிகையாக வலம் வருபவர் பூஜா ஹெக்டே. இவர் முதன் முதலில் தமிழ் சினிமாவில் மிஷ்கினால் அறிமுகம்…

21 hours ago

கள்ளக்காதலியை பார்க்க கோவை வந்த ‘துபாய் காதல் மன்னன்’ : உல்லாசத்தால் உயிர் போன சோகம்!

கரூர் மாவட்டம், க.பரமத்தி பகுதியில் கடந்த 26.04.2025 தேதியன்று காட்டு முன்னூர் என்ற பகுதியில் அடையாளம் தெரியாத ஆண் சடலம்…

22 hours ago

தவெக புகழ் பாடும் டூரிஸ்ட் ஃபேமிலி? போகிற போக்கில் ஆதரவை தூவிவிட்ட இயக்குனர்?

அமோக ஆதரவு சசிகுமார், சிம்ரன் ஆகியோரின் நடிப்பில் கடந்த மே தினத்தை முன்னிட்டு வெளியான “டூரிஸ்ட் ஃபேமிலி” திரைப்படம் ரசிகர்களின்…

22 hours ago

This website uses cookies.