விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார். வனிதா தொடர்ந்து திரைப்படங்களில் நடித்து வருகிறார். கூடவே தனது பிஸினஸையும் கவனித்து வருகிறார். கடைசியாக அர்ஜுன் தாஸ் நடிப்பில் வெளியான அநீதி என்ற படத்தில் நடித்திருந்தார்.
தற்போது வனிதாவின் மகள் ஜோவிகா பிக்பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக கலந்துக்கொண்டுள்ளார். இவர் அதில் படிப்பு சர்ச்சையில் சிக்கி விமர்சிக்கப்பட்டு வருகிறார். இந்நிலையில் இதுகுறித்து வனிதாவின் இரண்டாவது கணவர் பேசிய ஆடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி வைரலாகி வருகிறது. வனிதாவுக்கும் எனக்கும் 2012 -ம் ஆண்டு விவாகரத்து ஆனது. அந்த சமயத்தில் என் மகளுக்கு 3 வயது. அப்போது வனிதா குழந்தையை என்னிடமே விட்டு சென்றுவிட்டார்.
மேலும் படிக்க: மௌன ராகம் 2 சீரியல் ஜோடிக்கு நிச்சயதார்த்தம்.. வெளியிட்ட க்யூட் போட்டோ..!(Video)
ஜோவிகா என்னுடைய மகளும் இல்லை. ஆகாஷ் மகளும் இல்லை. IT யில் வேலை செய்து வந்த அருண் என்பவரிடம் மகள். அவருடன் தகாத உறவில் இருந்து தான் குழந்தை பெற்றார் வனிதா என்று பகிர் குற்றச்சாற்றை வைத்துள்ளார் ராஜன்.
மேலும் படிக்க: கலாநிதி மாறன் பொண்ண பாத்தா நமக்கு BP ஏறுது.. வைரலாகும் ரஜினி சொன்ன வார்த்தை..!(Video)
நான் தான் அவளை பார்த்து பார்த்து வளர்த்தேன். ஆனால் பிக் பாஸ்ஸில் தாய், தாய் என்று ஓவராக பாசத்தை பற்றியும் தியாகத்தை பற்றியும் பேசுகிறார். நான் தான் கஷ்டப்பட்டு என் மகளை வளர்த்தேன். ஒரு கட்டத்திற்கு பிறகு ஜோவிகாவை வனிதா அவருடன் அழைத்து சென்றுவிட்டனர். என் குழந்தையின் படிப்பை கெடுத்தது வனிதா தான் என பகிரங்கமாக குற்றம் சாட்டியுள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.