விஜய் நடிப்பில் வெளியான சந்திரலேகா படம் மூலம் தமிழ் சினிமாவுக்கு அறிமுகமானவர் நடிகை வனிதா. நட்சத்திர தம்பதி விஜயகுமார் மஞ்சுளாவின் மூத்த மகளான இவர், பிக்பாஸ் நிகழ்ச்சி மூலம் பிரபலமானார். சினிமாவில் ஜொலிக்க முடியாவிட்டாலும், பிக்பாஸ் நிகழ்ச்சியில் தைரியமான கருத்துகளை வெளிப்படுத்தினார். தற்போது திரைப்படங்களில், டிவி தொடர்களில் நடித்து வருகிறார்.
வனிதா தனது19 வயதில் ஆகாஷ் என்பவரை திருமணம் செய்து கொண்டார். பின்னர் அவருடன் கருத்து வேறுபாடு ஏற்பட்டு 2007ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றனர். பின்னர் ஆந்திராவை சேர்ந்த ராஜன் என்பவரை திருமணம் செய்த அவர், 2010ஆம் ஆண்டு விவாகரத்து பெற்றார். வனிதாவிற்கு ஒரு மகனும், இரண்டு மகள்களும் உள்ள நிலையில் இயக்குநர் பீட்டர் பாலை கடந்த 2020ஆம் ஆண்டு 3வதாக திருமணம் செய்தார். பெரிய சர்ச்சைகளுக்கு இடையில் நடந்த இத்திருமணத்தை லட்சுமி ராமகிருஷ்ணன், நடிகை கஸ்தூரி , தயாரிப்பாளர் ரவீந்தர் உள்ளிட்டோர் விமர்சித்தனர்.
அதன் பின் பீட்டர் பால் போதைக்கும், குடிக்கும் அடிமையாகி இருந்ததாக கூறி அவரை விவாகரத்து செய்துவிட்டார். இதனிடையே அதிகமாக குடித்ததால் பீட்டருக்கு கல்லீரல் பிரச்சனை ஏற்பட்டு சிகிச்சை பலனின்றி அண்மையில் தான் மரணமடைந்தார்.
இதனிடையே, வனிதா அண்மையில் அளித்த பேட்டி ஒன்றில், தன் வாழ்க்கையை சீரழித்தது என் அப்பாதான் என்ற குற்றச்சாட்டை முன் வைத்திருக்கிறார். அதில் அவர் தான் இப்போது, மனதளவில் வலுவான பெண்ணாக இருக்கிறேன் இந்த மாற்றத்திற்கான காரணம் என் அப்பா விஜயகுமார் தான். என் குடும்பத்தில் எல்லோரும் கவிதா, அனிதா, அருண், ப்ரீத்தா, ஸ்ரீதேவி என எல்லோர் பெயர்களையும் குறிப்பிட்டாலும் நடுவில் இருக்கும் என் பெயர் மட்டும் இருக்காது.
ஒரு வீடியோவை எனக்கு ஒருவர் அனுப்பி வைத்தார். இதை நான் மறுபடியும் மறுபடியும் 10 ,15 தடவை பார்த்தேன். அதில், அப்பா பிள்ளைகள் பற்றி பேசியிருப்பார். அதில், என்னைப் பற்றி மட்டும் பேசவே இல்லை. இது எனக்கு கோபத்தை கொடுக்கிறது. ஆனால், நான் பல தடவை கோபத்தில் அழுதேன். ஆனால், அவர் சொன்ன ஒரு விஷயத்தை மட்டும் நான் ஏற்றுக்கொள்கிறேன்.
பெண் பிள்ளைகளில் நான் மட்டும்தான் அப்பா பேச்சைக் கேட்கவில்லை. அவருக்கு கீழ்ப்படியாமல் இருந்தது உண்மை. ஆனால், என் வாழ்க்கையில் என் தந்தை எனக்கு தவறான அறிவுரைகளை மட்டும் சொல்லி இருக்கிறார். அதை நான் உணர்ந்து கொள்ளவும், அதனால் அவரின் பேச்சை கேட்கவில்லை என்று அப்பா தெரிவிக்கிறார்.
அப்பா சொன்னதை மட்டும் கடைப்பிடித்து இருந்தால் என் வாழ்க்கையே குலைந்திருக்கும், தன்னம்பிக்கை தான் இப்போது எனக்கு பலம். என் அப்பா விஜயகுமார் இல்லை என்று அவர்களால் கூற முடியாது. எனது தந்தையின் பெயருடன் எனது பெயரும் திரும்பத் திரும்ப வந்தால் அது அவர்களுக்கு நான் செய்யும் பழி வாங்குதல், அந்த பெயரை நான் மாற்றவே மாட்டேன் என வனிதா தெரிவித்து இருக்கிறார்.
கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…
வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…
விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…
வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…
கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…
திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…
This website uses cookies.