கோலாகலமாக நடந்தேறிய சரத்குமார் இல்ல திருமணம்; வாழ்த்திய தலைவர்கள்

தமிழில் வித்தியாசமான நல்ல கதைகளை தேர்வு செய்து நடித்து வரும் சிறந்த நடிகை வரலட்சுமி சரத்குமார். போடா போடி திரைப்படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார்.நிறைய திரைப்படங்களில் வில்லியாகவும் அசத்தியிருந்தார்.தற்போது குணச்சித்திர வேடங்களையும் ஏற்று நடித்து வருகிறார்.

இவரும் தொழிலதிபர் நிக்கோலாய் சச்தேவ் என்பவரும் காதலித்து வந்தனர்.இவர்களுடைய நிச்சயதார்த்தம் சில மாதங்களுக்கு முன்பு நடைபெற்றது.

நேற்று நடிகை வரலட்சுமி – நிக்கோலாய் சச்தேவ் திருமணம் தாய்லாந்தில் கோலாகலமாக நடைபெற்றது. திருமணத்திற்கு பின்பு திருமண வரவேற்பு நிகழ்ச்சி சென்னையில் நடைபெற்றது.


வரலட்சுமி நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்பு நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின், அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் மற்றும் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை ஆகியோர் கலந்துகொண்டு மணமக்களை வாழ்த்தினார்கள்.

முன்னதாக சரத்குமார் வெளியிட்ட அறிக்கையில்
பரபரப்பான வேலை காரணமாக தனிப்பட்ட முறையில் அழைப்பிதழை தவறவிட்டவர்களிடம் மன்னிப்பு கேட்கிறேன். பத்திரிக்கை குறிப்பை திருமண அழைப்பிதழாக கருதுமாறு கேட்டுக் கொண்டுள்ளார்.

நிகழ்வு முடிந்த மறுநாள் வரலக்ஷ்மி மற்றும் நிக்கோலாய் சச்தேவ் திருமண வரவேற்புப் படங்களைப் பகிர்ந்து கொள்வதாகவும் அவர் உறுதியளித்துள்ளார் .
ஆதலால் இன்று படங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கலாம். முன்னதாக, வரலட்சுமி மற்றும் நிக்கோலாய் சச்தேவின் திருமணத்திற்கு முந்தைய விழாவின் படங்கள் மற்றும் காணொளி வைரலானது. அதில் சரத்குமார், ராதிகா, ராடன் ஆகியோர் மகிழ்ச்சியுடன் நடமாடும் வீடியோ அனைவரையும் கவர்ந்தது.

Sudha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.