லியோ திரைப்படம் வெளியாகும் தியேட்டர் முன்பு போராட்டம் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!!!

லியோ திரைப்படம் வெளியாகும் தியேட்டர் முன்பு போராட்டம் நடக்கும்.. வாட்டாள் நாகராஜ் எச்சரிக்கை!!!

தமிழ்நாடு -கர்நாடகா இடையே காவிரி நீர் பங்கீடு செய்து கொள்வதில் பிரச்சனை இருந்து வருகிறது. இருப்பினும் காவிரி நீர் மேலாண்மை ஆணையத்தின் உத்தரவுப்படி தமிழகத்துக்கு தினமும் 3 ஆயிரம் கனஅடி நீரை கர்நாடகா திறந்து வருகிறது.

இந்நிலையில் தான் தமிழகத்துக்கு காவிரியில் தண்ணீர் திறக்க அங்குள்ள விவசாய அமைப்பினர் மற்றும் கன்னட அமைப்பினர் தொடர்ந்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.

மண்டியா, பெங்களூர், கர்நாடகா என என அடுத்தடுத்து பந்த் போராட்டம் நடத்தினர். குறிப்பாக கன்னட சலுவளி வாட்டாள் கட்சியின் தலைவரும், கன்னட அமைப்புகளின் ஒருங்கிணைந்த கூட்டமைப்பின் தலைவருமான வாட்டாள் நாகராஜ் பல போராட்டங்களை முன்னெடுத்து வருகிறார். கர்நாடகா முழுவதும் கடந்த மாதம் பந்த் நடத்தினார்.
அதன்பிறகு தமிழகத்துக்கு தண்ணீர் திறக்கும் மண்டியா மாவட்டம் கேஆர்ஆர் அணை (கிருஷ்ணராஜசாகர்) அணையை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர்.

மேலும் தமிழக-கர்நாடகா எல்லையான அத்திப்பள்ளியில் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தி வருகிறார். அதன்படி இன்று வாட்டாள் நாகராஜ் தலைமையில் கன்னட அமைப்பினர் காவிரியில் தண்ணீர் கேட்கும் தமிழக அரசை கண்டித்து கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூரில் உள்ள வட்டாச்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த முயன்றார்.

இதையடுத்து கர்நாடகா-தமிழக எல்லையான அத்திப்பள்ளியில் அவரை போலீசார் தடுத்து நிறுத்தி கைது செய்தனர்.

இந்நிலையில் தான் அவர் நடிகர் விஜய் நடித்து நாளை திரைக்கு வர உள்ள ‛லியோ’ திரைப்படத்தை கர்நாடகாவில் திரையிட அனுமதிக்க மாட்டோம் என பகிரங்கமாக எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதுதொடர்பாக அவர் கூறியதாவது: ‛‛நாளை ஏதோ ஒரு தமிழ் திரைப்படம் திரைக்கு வருகிறது. ஆம் லியோ. 900 ஷோ பெங்களூரில் லியோ ஓடுகிறது. இது என்ன தமிழ்நாடா?. ஸ்டாலினுக்கே நேரடியாக சொல்லிக்கொள்கிறனே். எச்சரிக்கையாக இருந்து கொள்ளுங்கள். தமிழ்நாடு சார்ந்த அனைத்து படங்களையும் ஓடவிடமாட்டேன்.

ஒரு படத்தை கூட ஓடவிடமாட்டேன். எங்களை பற்றி யாரோ சிலரை வைத்து கெட்டதாக பேச வைக்கிறீர்களா?. நீங்கள் எது வேண்டுமானாலும் கேட்கலாம். ஆனால் இப்படி தனிப்பட்ட வகையில் பேசுவது குற்றம். காவிரி நீரை தாருங்கள் என்று தமிழக அரசு கேட்டாலோ அல்லது போராட்டம் வெடித்தாலோ கர்நாடகாவில் லியோ படத்தை திரையிட விட மாட்டோம்.

கர்நாடகாவில் லியோ திரைப்படம் வெளியாகும் திரையரங்குகள் முன்பு போராட்டம் நடத்தப்படும்” என வாட்டாள் நாகராஜ் பகிரங்கமாக எச்சரித்துள்ளார்.

Updatenews Udayachandran

My name is Udayachandran RadhaKrishnan. I work as a Sub Editor at Updatenews360.

Recent Posts

அல்லு அர்ஜூனை கைது பண்ணீங்க, விராட் கோலியை கைது பண்ணீங்களா? கிடுக்குப்பிடி கேள்வி கேட்ட கூல் சுரேஷ்

கூட்டத்தில் பலியான பெண் கடந்த 2024 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5 ஆம் தேதி அல்லு அர்ஜூனின் “புஷ்பா…

4 hours ago

திமுக அரசுக்கு எதிராக பேசுவதால் என் மீது வழக்கு தொடுக்க சதி நடக்கிறது : எம்எல்ஏ பரபரப்பு புகார்!

வேலூர் மாவட்டம், தமிழக முதல்வர் காணொளி காட்சி வாயிலாக இன்றுகே.வி குப்பம் பகுதியில் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியை…

5 hours ago

வெறித்தனமான அப்டேட்! விஜய் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இன்ப அதிர்ச்சி?

விஜய்யின் கடைசி படம் விஜய்யின் கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படம் வருகிற 2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 9…

5 hours ago

ஏதாவது ஒரு ஆக்ஷன் எடுப்பாங்க… மா விவசாயி போராட்டம் குறித்து அமைச்சரின் அலட்சிய பதில்!

வேலூர் மாவட்டம் கே.விகுப்பத்தில் தமிழக அரசின் சார்பில் புதியதாக அறிவியல் கலைக்கல்லூரியை தமிழக முதல்வர் மு.க்.ஸ்டாலின் சென்னையிலிருந்து காணொளி காட்சிவாயிலாக…

6 hours ago

கூலி படத்தின் பிசினஸை அசால்டாக தட்டிவிட்டு ஓவர்டேக் செய்த ஜனநாயகன்? செம டிவிஸ்ட்டா இருக்கே!

கூலி பற்றி பரவிய தகவல் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடிப்பில் உருவாகி வரும் “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட்…

6 hours ago

அதிமுகவை சீண்டுபவர்கள் யாராக இருந்தாலும் தூக்கி எறியப்படுவார்கள் : விஜயபாஸ்கர் ஆவேசம்!

திமுக ஐடி வின் சார்பில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தவறாக சித்தரித்து நேற்று சமூக வலைதளங்களில் கார்ட்டூன் படம்…

7 hours ago

This website uses cookies.