சினிமா / TV

மயிருங்குறது கெட்ட வார்த்தையா? என் படத்துல அந்த விஷயமே இல்லை- விக்ரம் பட இயக்குனர் பரபரப்பு பேட்டி…

கலவையான விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் எஸ்.யு.அருண் குமார் இயக்கத்தில் கடந்த வாரம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றுள்ளது. இத்திரைப்படத்தில் விக்ரமிற்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்துள்ளார். மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமுடு உள்ளிட்ட பலரும் நடித்துள்ளனர். 

அருண் குமாரின் மேக்கிங் யதார்த்தமாக இருக்கிறது, ஆனால் படத்தின் திரைக்கதையில் சற்று சொதப்பல் இருப்பதாக பல விமர்சனங்கள் வந்த வண்ணம் உள்ளன. 

என் படத்துல அந்த விஷயமே கிடையாது…

இந்த நிலையில் சமீபத்தில் இத்திரைப்படத்தின் இயக்குனரான எஸ்.யு.அருண் குமார் ஒரு பேட்டியில் கலந்துகொண்டார். அப்போது நிருபர், “வீர தீர சூரன் ஒரு மதுரை சார்ந்த கதை. பொதுவாக மதுரை சார்ந்த கதையில் கெட்ட வார்த்தைகள் பிரதானமாக இருக்கும். ஆனால் இந்த படத்தில் கெட்ட வார்த்தை பயன்படுத்தவே இல்லை. ஒரே ஒரு வார்த்தை மட்டும் வரும். ஆனால் அது கெட்ட வார்த்தை என்று சொல்லமுடியுமா என தெரியவில்லை. எதனால் இப்படி முடிவெடுத்தீர்கள்?” என கேட்டார். 

அதற்கு அருண் குமார், “என்னுடைய எந்த படத்திலும் தண்ணி அடிப்பது போலவோ தம் அடிப்பது போலவோ காட்சிகளை நான் வைத்தது இல்லை. அது அவசியப்படவில்லை என நான் நினைக்கிறேன். இந்த படத்திலே கூட மயிர் என்ற வார்த்தையை பயன்படுத்தியிருக்கிறோம். அது அந்த கதாபாத்திரத்தின் வலியை காட்டுவது போல்தான் அமைந்திருக்கும். இத்தனைக்கும் அது தமிழ் சொல்தான். ஆனால் அது வழக்கத்தில் எப்படி பயன்படுத்தப்படுகிறது என்பதை பொறுத்துதான் சென்சார் கொடுக்கப்படுகிறது. அது மட்டுமே பிரதானமாக கதைக்குள் இருக்கக்கூடாது. 

இந்த படத்தை நான் கதைக்குள் உள்ளடக்கிய படமாக எடுக்கத்தான் முயற்சி செய்தேன். இதுதான் காரணம். கெட்ட வார்த்தை வைத்துதான் கைத்தட்டல் வாங்க வேண்டும் என்று எனக்கு தோன்றவில்லை” என பதிலளித்துள்ளார். இப்பேட்டி இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.