சினிமா / TV

வீர தீர சூரன் வெற்றி படம்னு சொன்னா நாங்களாம் நம்பணுமா? பேட்டியில் எகிறிய பிரபலம்…

கலவையான விமர்சனம்

சீயான் விக்ரம் நடிப்பில் கடந்த மார்ச் மாதம் வெளியான “வீர தீர சூரன் பார்ட் 2” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் கலவையான விமர்சனங்களை பெற்றது. இத்திரைப்படத்தை எஸ்.யு.அருண் குமார் இயக்கியிருந்தார். இதில் விக்ரமுக்கு ஜோடியாக துசாரா விஜயன் நடித்திருந்தார். 

மேலும் இவர்களுடன் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சரமூடு போன்ற பலரும் நடித்திருந்தனர். இத்திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பிற்கு மத்தியில் வெளியானது. ஆனால் எதிர்பார்த்த அளவிற்கு வரவேற்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் சமீபத்தில் ஒரு பேட்டியில் கலந்துகொண்ட தமிழக திரையரங்க உரிமையாளர்கள் சங்கத் தலைவரான திருப்பூர் சுப்ரமணியம் இத்திரைப்படத்தை குறித்து கூறிய கருத்து இணையத்தில் வைரல் ஆகி வருகிறது. 

நான் ஒத்துக்கொள்ள மாட்டேன்

“வீர தீர சூரன் வெற்றிப்படம் என்று சொன்னீர்கள் என்றால் நான் ஒத்துக்கொள்ள மாட்டேன். நிச்சயமாக அது வெற்றிப்படமே கிடையாது. குட் பேட் அக்லி படத்தை ஒரு கணக்கிலாவது சேர்த்துக்கொள்ளலாம். ஏனென்றால் வசூல் ஆவது ஆனது. ஆனால் வீர தீர சூரன் வசூல் ஆகவே இல்லை. 

ஆனால் இவர்கள் என்ன செய்கிறார்கள் என்றால் மிகப் பெரிய மாலையை கொண்டு சென்று விக்ரமிற்கு போடுகின்றனர். அவர் என்ன நினைத்துக்கொள்கிறார் என்றால், படம் வெற்றிப்படம் போல, ஆதலால் இதே போன்ற திரைப்படத்தில் நடிப்போம் என்று முடிவெடுத்து விடுகிறார். இதை முதலில் நிறுத்துங்கள் அய்யா” என்று திருப்பூர் சுப்ரமணியம் அப்பேட்டியில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார். 

Arun Prasad

Recent Posts

தக் லைஃப் டிரெயிலர் வெளியீட்டு விழாவிற்கு அனுமதி மறுப்பு? அப்போ ரசிகர்களோட நிலைமை?

தள்ளிப்போன வெளியீட்டு விழா இந்தியா-பாகிஸ்தான் எல்லைகளில் போர் மேகம் சூழ்ந்திருந்த நிலையில் “தக் லைஃப்” திரைப்படத்தின் டிரெயிலர் மற்றும் ஆடியோ…

4 hours ago

வாட் ப்ரோ இட்ஸ் வெரி ராங் ப்ரோ? ஷூட்டிங் ஸ்பாட்டில் விஜய் செய்யும் விநோத காரியம்! ஏன் இப்படி?

அரசியலில் விஜய் விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம்…

5 hours ago

அத்துமீறு என்பதற்கு அர்த்தம் தெரியுமா? அன்புமணியை விளாசிய திருமாவளவன்!

பாமக சித்திர முழுநிலவு மாநாட்டில பேசிய அன்புமணி , இளைஞர்களை அத்துமீறு என்றெல்லாம் நான் சொல்ல மாட்டேன். படித்து வேலைக்கு…

5 hours ago

அம்மா தினமும் சரக்கு அடிப்பாங்க.. அப்பாடி குடியால் செத்து போனாரு : கதறி அழுத பிக்பாஸ் பிரபலம்!

வாழ்க்கையில் பல துனபங்களை சந்தித்து மாடலிங் துறையில் ஈடுபட்டு படிப்படியாக முன்னேறியதாக பிக் பாஸ் பிரபலம் தனது கண்ணீர் கதை…

6 hours ago

வீதிக்கு வந்த வடகலை – தென்கலை மோதல் : நா கூசும் வகையில் பேசியதால் பக்தர்கள் முகம் சுழிப்பு!

கோயில்களின் நகரம் என சிறப்பு பெற்ற காஞ்சியில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்றான காஞ்சிபுரம் தேவராஜ பெருமாள் திருக்கோயிலில்…

7 hours ago

ஆண்கள் மீது சுத்தமா நம்பிக்கை இல்ல… மாலைமாற்றி திருமணம் செய்த பெண்கள்!

இன்றைய காலக்கட்டங்களில் ஓரினச்சேர்க்கை என்பது இந்தியாவில் அதிகரித்து வருகிறது. இதற்கு இந்திய சட்டம் அங்கீகரிக்காவிட்டாலும், இரு பெண்கள் ஒன்றாக வாழ்வது,…

8 hours ago

This website uses cookies.