டோலிவுட்டில் சங்கராந்தி ஸ்பெஷலாக சிரஞ்சீவி, பாலகிருஷ்ணா படங்களுடன் துணிவு, வாரிசு படங்களும் தெலுங்கில் டப் ஆகி வெளியானது.
தமிழ்நாட்டில் பொங்கல் ரிலீஸ் ரேஸ் உச்சக்கட்டத்தை எட்டியுள்ளது. இந்த ஆண்டு பொங்கல் ரிலீசாக துணிவு படமும் வாரிசு படம் ஜனவரி 11ஆம் தேதி ரிலீசானது.
தமிழ்நாட்டின் இரு பெரும் நடிகர்களான அஜித் – விஜய் படங்கள் கிட்டத்தட்ட 8 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் பொங்கலுக்கு மோதி உள்ளது. இரு தரப்பு ரசிகர்களும் உற்சாகக் கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கோலிவுட் பொங்கல் வெளியீட்டுக்கு இணையாக டோலிவுட் சினிமாவிலும் சங்கராந்தி ரிலீசாக, டோலிவுட்டின் மெகா ஸ்டாராக வலம் வரும் நடிகர் சிரஞ்சீவியின் படமும், தெலுங்கு சினிமா உச்ச நட்சத்திரமும் தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.வுமான பாலகிருஷ்ணா படமும் இந்த சங்கராந்தி பண்டிகைக்கு நேரடியாக மோதி உள்ளது.
அதன்படி டோலிவுட் மெகா ஸ்டார் சிரஞ்சீவி மற்றும் முன்னணி நடிகர் ரவி தேஜா இணைந்து நடித்துள்ள ‘வால்டர் வீரய்யா’ படம் ஜனவரி 13ஆம் தேதியும், பாலகிருஷ்ணாவின் வீர சிம்மா ரெட்டி படம் ஜனவரி 12ஆம் தேதியும் (இன்று) ரிலீசானதால், டோலிவுட் வட்டாரம் களைகட்டத் தொடங்கியுள்ளது.
இந்நிலையில், ‘வீர சிம்மா ரெட்டி’ திரையிடப்பட்டிருந்த திரையரங்க திரையில் திடீரென தீப்பற்றி எரிந்ததால், படம் பார்த்துக் கொண்டிருந்தவர்கள் அலறியடித்துக் கொண்டு வெளியேறினர்.
அதே நேரம் விஜய்யின் வாரிசு படம் தமிழ் – தெலுங்கு ஆகிய இரண்டு மொழிகளிலும் ரிலீசாகி சங்கராந்தி ஸ்பெஷல் படங்களுடன் போட்டி போட உள்ளது. அதேபோல் ‘துணிவு’ படமும் தெலுங்கிலும் ரிலீசாக உள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கெனவே கோலிவுட்டில் விஜய் தான் நம்பர் 1 என தில் ராஜூ சொன்ன கையோடு தெலுங்கிலும் பிரம்மாண்டமான முறையில் வாரிசு படத்தை வாரசுடு என ரிலீஸ் செய்கிறார். அதே போல் துணிவு படம் தெகிம்பு என்ற பெயரில் டோலிவுட்டில் வெளியாக உள்ளது.
உச்ச நட்சத்திரம் தெலுங்கு சினிமாவின் உச்ச நட்சத்திரமாக விளங்கும் நடிகர்களில் ஒருவர்தான் ஜூனியர் என்டிஆர். இவரது கெரியரின் தொடக்கத்தில் பல…
சன்டிவியில் பிரைம் டைமில் ஒளிபரப்பான சீரியல் சுந்தரி. இல்லத்தரசிகளை கட்டிப்போட்ட சீரியலுக்கு சொந்தக்காரியாக இருப்பவர் கேப்ரில்லா. கிராமத்து பெண்ணாக கலக்கிய…
வழக்கில் சிக்கிய ரஹ்மான் இசைப்புயல் எனவும் ஆஸ்கர் நாயகன் எனவும் கொண்டாடப்படுபவர் ஏ.ஆர்.ரஹ்மான். கிட்டத்தட்ட 33 வருடங்களாக இந்திய சினிமாவின்…
தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டை அருகே உள்ள உதயசூரியபுரம் பகுதியில் பெண் ஒருவர் தலை துண்டிக்கப்பட்டு கொலை செய்து கிடப்பதாக போலீசாருக்கு…
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த தொண்டன் துளசி பகுதியில் உள்ளது பிரபல தொழிலதிபரும் சாய் சுப்ரபாதம் ஹோட்டல் மற்றும் ஆங்கர்…
நண்பேன்டா! சந்தானமும் ஆர்யாவும் முதன் முதலில் இணைந்து நடித்த திரைப்படம் “ஒரு கல்லூரியின் கதை”. இத்திரைப்படத்தில் பணியாற்றிய சமயத்தில் இருவரும்…
This website uses cookies.