சினிமா / TV

இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் படி அது தவறு…வெற்றிமாறனுக்கு வந்த திடீர் வக்கீல் நோட்டிஸ்…அதிர்ச்சியில் படக்குழு.!

பேட் கேர்ள் படத்தால் வெற்றிமாறனுக்கு சிக்கல்

தமிழ் சினிமாவில் பல திரைப்படங்கள் ரிலீஸ் ஆவதற்கு முன்னாடி பல வித சிக்கல்களை சந்தித்து வருகிறது.அந்த வகையில் வெற்றிமாறன் தயாரித்திருக்கும் ‘பேட் கேர்ள்’ படத்தின் டீசர் சமிபத்தில் வெளியானது.

இதில் நடித்திருக்கும் பள்ளி மாணவியை தவறாக சித்தரிக்கப்பட்டுள்ளதாக இயக்குனர் வெற்றிமாறனுக்கு வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது.அறிமுக இயக்குனர் வர்ஷா பரத் இயக்கத்தில் உருவாகியுள்ள பேட் கேர்ள் திரைப்படம்,ஒரு பள்ளி மாணவியை மையமாக வைத்து எடுக்கப்பட்டுள்ளது,அந்த மாணவி வீட்டின் சொல் பேச்சை மீறி அவளுடைய விருப்பம்படி சுதந்திரமாக இருக்க ஆசைப்படுகிறாள்,மேலும் ஆண் நண்பருடன் பழக்கம்,குடிப்பது,புகைபிடிப்பது போன்ற பல்வேறு கெட்ட செயல்களை செய்வது போல அந்த டீசரில் காட்டி இருப்பார்கள்.

இதையும் படியுங்க: கெத்து காட்டும் அட்டகத்தி தினேஷ்…கிடுகிடுவென சம்பளத்தை உயர்த்தி அசத்தல்…!

இந்த படத்தில் அந்த பெண்ணை ஒரு பிராமண சமூகத்தை சேர்ந்த பெண்மணியாக காட்டியுள்ளதால்,இப்படத்திற்கு தற்போது எதிர்ப்பு கிளம்பியுள்ளது.இதனால் வழக்கறிஞர் சுந்தரேசன் என்பவர் வெற்றிமாறனுக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.அதில் பிராமண சமூகத்தின் நற்பெயரை கெடுக்கும் விதமாக இப்படம் எடுக்கப்பட்டுள்ளது,பிரபல இயக்குனராக இருந்து கொண்டு பிராமநர்களின் பாஷயை தவறாக பயன்படுத்தியுள்ளார்,இது அந்த சமூகத்திற்கு மிகப்பெரிய அவமானத்தை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் படத்தின் காட்சிகள் பெரும்பாலும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் பிரிவு 19 ஐ மீறுவதாகும்,இது ஒரு கிரிமினல் குற்றம் என்று அதில் குறிப்பிட்டுள்ளார்,ஆகவே தமிழ்நாடு பிராமண சங்கம் படத்தில் பயன்படுத்தப்படும் பிராமண மொழியை கண்டிக்கிறது,மேலும் படத்தின் தலைப்பை மாற்ற வேண்டும் இல்லையென்றால் சட்டப்படி நடவடிக்கை உங்கள் மீதும்,உங்களுடைய படத்தின் மீதும் எடுப்போம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.