சினிமா / TV

வெற்றிமாறனை போட்டு பந்தாடிய எதிர்ப்புகள்? தயாரிப்பு நிறுவனத்தை மூட இதுதான் காரணமா?

தமிழ் சினிமாவின் முக்கிய இயக்குனராக வலம் வரும் வெற்றிமாறன் “கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனி” என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கினார். இதன் மூலம் பல திரைப்படங்களை தயாரித்து வந்த வெற்றிமாறன் சமீபத்தில் “மனுஷி”, “பேட் கேர்ள்” போன்ற திரைப்படங்களை தயாரித்திருந்தார். 

இந்த இரண்டு திரைப்படங்கள் உருவாகி பல மாதங்கள் ஆகிறது. இதில் “மனுஷி” திரைப்படம் வெளியாவதில் சிக்கல் ஏற்பட்டது. அதாவது இத்திரைப்படத்தில் இடம்பெற்ற சில காட்சிகளும் வசனங்களும் ஆட்சேபகரமாக உள்ளதாக கூறி சென்சார் போர்டு இத்திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் தர மறுத்தது.

இதனை தொடர்ந்து “மனுஷி” திரைப்படத்திற்கு சென்சார் சான்றிதழ் வழங்குமாறு சென்னை உயர்நீதிமன்றத்தை அணுகினார் வெற்றிமாறன். இந்த வழக்கை விசாரித்த நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் “மனுஷி” திரைப்படத்தை பார்த்தார். சில காட்சிகளையும் வசனங்களையும் மட்டும் மாற்றியமைத்து இரண்டு வாரங்களில் விண்ணப்பிக்குமாறு உத்தரவிட்டார். 

அதனை அடுத்து “பேட் கேர்ள்” திரைப்படத்தில் சிறுவர்களை குறித்த ஆபாச காட்சிகள் இருப்பதாக கூறி புகார் எழுந்த நிலையில் இத்திரைப்படத்தின் டீசர்  இணையத்தில் இருந்து நீக்கப்பட்டது. மேலும் இத்திரைப்படத்திற்கு பல எதிர்ப்புகள் கிளம்பிய நிலையில் வருகிற செப்டம்பர் 5 ஆம் தேதி இத்திரைப்படம் வெளியாகவுள்ளது. 

இவ்வாறு இரண்டு திரைப்படங்களும் வெற்றிமாறனை போட்டு பந்தாடிய நிலையில் சமீபத்தில் “பேட் கேர்ள்” திரைப்படத்தின் பத்திரிக்கையாளர் சந்திப்பில் பேசிய வெற்றிமாறன், தனது தயாரிப்பு நிறுவனமான கிராஸ்ரூட் ஃபிலிம் கம்பெனியை மூட முடிவெடுத்துள்ளதாக தெரிவித்தார். “இனிமேல் படம் தயாரிக்கப்போவதில்லை” எனவும் அவர்  கூறியது அவரது ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.