சினிமா / TV

தனுஷ் என்னிடம் பணம் கேட்டார்? திடீர் வீடியோவை வெளியிட்ட வெற்றிமாறன்…

வடசென்னை 2?

வெற்றிமாறன்-சிம்புவை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளார். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கவுள்ளார். இத்திரைப்படத்தின் புரொமோவுக்கான படப்பிடிப்பு சில நாட்களுக்கு முன் நடைபெற்ற நிலையில் அப்புகைப்படம் இணையத்தில் லீக் ஆனது. இந்த நிலையில் வெற்றிமாறன்,சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் “வடசென்னை 2” என தகவல் பரவியது. 

எனினும் இத்திரைப்படம் “வடசென்னை” திரைப்படத்தில் இடம்பெற்ற சில அம்சங்களை பயன்படுத்தி எடுக்கப்படவுள்ளதாகவும் வேறொரு தகவல் வெளிவந்தது. அது மட்டுமல்லாது சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படத்திற்காக “வடசென்னை” படத்தின் சில அம்சங்களை பயன்படுத்திக்கொள்ள வெற்றிமாறன் தனுஷின் அனுமதி கேட்டபோது தனுஷ் வெற்றிமாறனிடம் ரூ.20 கோடி கேட்டதாகவும் செய்திகள் பரவியது.

இந்த நிலையில் இயக்குனர் வெற்றிமாறன் இது தொடர்பாக வீடியோ ஒன்றை வெளியிட்டு விளக்கம் அளித்துள்ளார். 

தனுஷ் என்னிடம் பணம் கேட்டார்?

“நான் சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் வடசென்னையின் இரண்டாம் பாகமா என்று சில யூகங்கள் இருக்கிறது. ஆனால் இது வடச்சென்னை 2 கிடையாது. வடசென்னை 2 என்பது அன்புவின் எழுச்சிதான். தனுஷ்தான் அதில் நடிப்பார். ஆனால் நான் சிம்புவை வைத்து இயக்கவுள்ள திரைப்படம் “World of Vadachennai”. 

அதாவது வடசென்னை திரைப்படத்தில் சில கதாபாத்திரங்களும் அம்சங்களும் சிம்புவின் படத்திலும் இருக்கும். தனுஷ்தான் வடசென்னை படத்தின் தயாரிப்பாளர். அவர்தான் அதன் காப்பிரைட்டுக்கு உரிமையாளர். அப்படி இருக்கும்போது அவரது படைப்பில் இருக்கும் சில விஷயங்களை மற்றொரு படத்திற்கு இன்னொருவர் பயன்படுத்தும்போது பணம் கொடுங்கள் என கேட்பது சட்டப்படி சரியே. அதை தவறாக பார்க்கவேண்டிய அவசியமே இல்லை.

எனினும் அதே வேளையில் உண்மை என்னவென்றால், தனுஷிடம் சிம்பு படத்தை பற்றி கூறியபோது, ‘உங்களுக்கு என்ன Comfortable ஆக இருக்கிறதோ அதை செய்யுங்கள். நாங்கள் எங்கள் தரப்பில் இருந்து தடையில்லா சான்றிதழ் கொடுத்துவிடுகிறோம். பணம் எதுவும் வேண்டாம்’ என அப்போதே சொல்லிவிட்டார். ஆனால் தனுஷை பற்றியோ என்னை பற்றியோ இணையத்தளத்தில் தவறாக பேசுவது எனக்கு உவப்பாக இல்லை” எனவும்  கூறியுள்ளார். 

“வடசென்னை” திரைப்படத்தின் கதாபாத்திரங்களை வைத்து சிம்புவின் திரைப்படம் உருவாகி வருவதாக தகவல்கள் பரவி வந்த நிலையில் வெற்றிமாறன் இதனை உறுதிபடுத்தியுள்ளார். “வடசென்னை” திரைப்படத்தில் அமீர் ஏற்று நடித்திருந்த ராஜன் கதாபாத்திரத்தை மையமாக வைத்துதான் வெற்றிமாறன் சிம்புவை வைத்து இயக்கும் திரைப்படம் உருவாகவுள்ளதாகவும் சில தகவல்கள் தெரிவிக்கின்றன.  

Arun Prasad

Recent Posts

சஸ்பென்ஸ் கதாபாத்திரத்தை உடைத்த கூலி படக்குழு? ஆமிர்கான் ரோல் குறித்த வேற லெவல் அப்டேட்!

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம் தேதி வெளிவரவுள்ளது. இதில்…

6 hours ago

ரொம்ப டார்ச்சர் பண்றங்க.. என் சாவுக்கு காரணம் திமுகவினர்தான் : அதிமுக ஐடி விங் நிர்வாகி தற்கொலை!

தி.மு.க நிர்வாகிகளை கைது செய்தால் மட்டுமே உடலை வாங்குவோம் என் உறவினர்கள் கோவை அரசு மருத்துவமனை பிணவறை முன்பு ஆர்ப்பாட்டத்தில்…

7 hours ago

எக்குத்தப்பாய் சம்பளத்தை ஏத்திய ரஜினிகாந்த்? ஸ்தம்பித்துப்போன சன் பிக்சர்ஸ்?

லோகேஷ் கனகராஜ்-ரஜினிகாந்த் கூட்டணி லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்துள்ள “கூலி” திரைப்படம் வருகிற ஆகஸ்ட் மாதம் 14 ஆம்…

7 hours ago

அஜித்குமார் போட்ட முக்கிய கண்டிஷனால் தெறித்து ஓடும் தயாரிப்பாளர்கள்? ஏன் இப்படி?

அஜித்குமாரின் நிபந்தனைகள் “குட் பேட் அக்லி” திரைப்படத்தை தொடர்ந்து அஜித்குமார் மீண்டும் ஆதிக் ரவிச்சந்திரனுடன் இணையவுள்ளதாக கூறப்படுகிறது. சமீப மாதங்களாக…

8 hours ago

கள்ளதொடர்பால் கணவன் கொலை.. இரவு முழுவதும் மனைவி செய்த பகீர் சம்பவம்!!

கள்ளத்தொடர்பால் பல சம்பவங்கள் அரங்கேறி வருவது வாடிக்கையாகிவிட்டது. அது கொலை அல்லது தற்கொலையில் முடிவது அதிகரித்து வருகிறது. கடலூர் மாவட்டம்…

9 hours ago

என்னை மன்னிச்சிடுங்க? சூர்யா சேதுபதி விவகாரத்தில் மன்னிப்பு கேட்ட விஜய் சேதுபதி!

கதாநாயகனாக அறிமுகமாகும் சூர்யா சேதுபதி விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகும் திரைப்படம் “பீனிக்ஸ்”. சூர்யா சேதுபதி…

9 hours ago

This website uses cookies.