சினிமா / TV

கைவிடப்பட்ட வாடிவாசல்? சூர்யாவுக்கு டாட்டா காண்பித்து வேறு நடிகருக்குத் தாவிய வெற்றிமாறன்?

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” திரைப்படம் தொடங்கப்பட உள்ளதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது. இதற்காக சூர்யா பிரத்யேகமாக  ஒரு காளை மாட்டுடன் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. “விடுதலை பார்ட் 2” திரைப்படத்திற்குப் பிறகு “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் பலரும்  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். 

இதனிடையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக வெற்றிமாறன், சூர்யா ஆகியோருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்ற கேப்ஷனுடன் வெளியிட்டிருந்தார் கலைப்புலி எஸ் தாணு. இப்புகைப்படம் ரசிகர்கள் பலரது ஆர்வத்தையும் தூண்டியது. மிக விரைவிலேயே “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட வாடிவாசல்?

இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் சிலம்பரசனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தயாரிக்கிறாராம். இதனால் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

“கங்குவா” திரைப்படத்திற்குப் பிறகு  சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்தான் “வாடிவாசல்” திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

மகன்களுக்காக எடுத்த திடீர் முடிவு… உச்சக்கட்ட மகிழ்ச்சியில் ரஜினிகாந்த் : பிரபலம் ஓபன்!!

தமிழ் சினிமாவில் அடுத்தடுத்து பிரபல தம்பதிகள் விவாகரத்து பெற்று வருவது ரசிகர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இந்த பட்டியல் அதிகரித்து…

2 hours ago

மூத்த மகனுக்கு பிரம்மாண்டம்.. இளைய மகனுக்கு எளிமை.. பாரபட்சம் காட்டினாரா நாகர்ஜூனா?!

நாகர்ஜூனாவின் மூத்த மகன் நாகசைதன்யாவின் 2வது திருமணம் பெரும் பரபரப்பு இடையே நடந்து முடிந்தது. நடிகை சோபிதாவை இரண்டாவது மனைவியாக்கினார்.…

2 hours ago

பெண்களின் உள்ளாடைகளுக்கு மட்டுமே குறி.. விநோத திருடனின் பகீர் சிசிடிவி காட்சி!

கோவை கண்ணம்பாளையத்தில் வசிக்கும் பொதுமக்கள், வீடுகளில் துவைத்து உலரப் போடப்பட்டிருந்த துணிகள், குறிப்பாக உள்ளாடைகள் தொடர்ந்து காணாமல் போவதாக புகார்…

2 hours ago

அறிவிக்காத ஒன்றை வைத்து CM விஷம பிரச்சாரம்.. சாதிவாரி கணக்கெடுப்பு வேண்டாம் என்கிறாரா? எல். முருகன் கேள்வி!

ஈரோடு மற்றும் மதுரையில் பல்வேறு நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக மத்திய இணை அமைச்சர் எல்.முருகன் கோவை விமான நிலையம் வந்தடைந்தார்.…

3 hours ago

ஞானசேகரனுக்கும் எனக்கும் தொடர்பில்லை.. அண்ணாமலையை ஆடியோ ரிலீஸ் செய்ய சொல்லுங்கள்.. அமைச்சர்!

ஈரோடு அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவ மாணவர்களுக்கு பட்டமளிப்பு விழா மற்றும் புதிய பொது சுகாதார கட்டடங்கள் திறப்பு விழா மற்றும்…

4 hours ago

கோவையில் வாங்கிய ஆர்மோனியப் பெட்டி… எமோஷனலாக பேசிய இளையராஜா!!

கோவையில் இசைஞானி இளையராஜா இன்னிசை நிகழ்வு நாளை நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக கோவை வந்த இளையராஜா, தனியார் நட்சத்திர…

5 hours ago

This website uses cookies.