சினிமா / TV

கைவிடப்பட்ட வாடிவாசல்? சூர்யாவுக்கு டாட்டா காண்பித்து வேறு நடிகருக்குத் தாவிய வெற்றிமாறன்?

வெற்றிமாறன்-சூர்யா கூட்டணி

வெற்றிமாறன் இயக்கத்தில் சூர்யா நடிப்பில் “வாடிவாசல்” திரைப்படம் தொடங்கப்பட உள்ளதாக மூன்று வருடங்களுக்கு முன்பே அறிவிப்பு வெளிவந்தது. இதற்காக சூர்யா பிரத்யேகமாக  ஒரு காளை மாட்டுடன் பயிற்சி எடுத்துக்கொண்டு வந்ததாகவும் கூறப்பட்டது. “விடுதலை பார்ட் 2” திரைப்படத்திற்குப் பிறகு “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என ரசிகர்கள் பலரும்  எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருந்தனர். 

இதனிடையே ரசிகர்களின் எதிர்பார்ப்பை எகிறவைக்கும் விதமாக வெற்றிமாறன், சூர்யா ஆகியோருடன் இணைந்து தான் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தை “அகிலம் ஆராதிக்க வாடிவாசல் திறக்கிறது” என்ற கேப்ஷனுடன் வெளியிட்டிருந்தார் கலைப்புலி எஸ் தாணு. இப்புகைப்படம் ரசிகர்கள் பலரது ஆர்வத்தையும் தூண்டியது. மிக விரைவிலேயே “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தொடங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது.

கைவிடப்பட்ட வாடிவாசல்?

இந்த நிலையில் தற்போது சூர்யா ரசிகர்களுக்கு அதிர்ச்சியை கொடுக்கும் வகையில் ஒரு தகவல் வெளிவந்துள்ளது. அதாவது வெற்றிமாறன் சிலம்பரசனை வைத்து ஒரு புதிய திரைப்படத்தை இயக்கவுள்ளாராம். இத்திரைப்படத்தை கலைப்புலி எஸ் தாணுவே தயாரிக்கிறாராம். இதனால் “வாடிவாசல்” திரைப்படம் கைவிடப்பட்டுவிட்டதாக கூறப்படுகிறது. 

“கங்குவா” திரைப்படத்திற்குப் பிறகு  சூர்யா “வாடிவாசல்” திரைப்படத்தின் படப்பிடிப்பில் கலந்துகொள்வார் என எதிர்பார்க்கப்பட்டிருந்த நிலையில் தற்போது ஆர் ஜே பாலாஜி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் வெங்கி அட்லூரி இயக்கத்தில் ஒரு திரைப்படத்திலும் நடித்து வருகிறார்.  இந்த நிலையில்தான் “வாடிவாசல்” திரைப்படம் டிராப் ஆகிவிட்டதாக கூறப்படுகிறது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.