விஜய் தனது கடைசித் திரைப்படமான “ஜனநாயகன்” திரைப்படத்தில் நடித்து வருகிறார். இத்திரைப்படத்தின் படப்பிடிப்பு வருகிற ஜூன் மாதம் முடிவடையவுள்ளது. அதன் பிறகு முழு நேர அரசியல்வாதியாக விஜய் களமிறங்கவுள்ளார். வருகிற 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ளும் விதமாக வருகிற ஜூலை மாதம் முதல் தமிழகம் முழுவதும் விஜய் சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ளதாகவும் கூறப்படுகிறது. இந்த நிலையில் “ஜனநாயகன்” படப்பிடிப்பில் விஜய் மிகவும் விநோதமாக நடந்துகொள்வதாக ஒரு தகவல் வெளிவருகிறது.
இதற்கு முந்தைய திரைப்படங்களின் படப்பிடிப்புகளில் விஜய் கொஞ்சமேனும் சக நடிகர்களுடனும் டெக்னீஷியன்களுடனும் கலகலவென்று பேசுவாராம். ஆனால் “ஜனநாயகன்” திரைப்படத்தின் படப்பிடிப்பு தளத்தில் மிகவும் அமைதியாக இருக்கிறாராம். அது மட்டுமல்லாது ஒரு காட்சியில் நடித்துமுடித்துவிட்டு அடுத்த காட்சிக்கான இடைவேளை வரும்போது அவரை சுற்றி பவுன்சர்கள் சூழ்ந்துகொள்கிறார்களாம். இது அத்திரைப்படத்தில் பணியாற்றுபவர்களுக்கு அழுத்தத்தை ஏற்படுத்துவதாக கூறுகின்றனர். விஜய் அரசியலுக்குள் நுழைந்த பிறகே இவ்வாறு நடந்துகொள்வதாகவும் சிலர் விமர்சிக்கின்றனராம்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.