நடிகர் விஜய்யும், நடிகை த்ரிஷாவும் லிப்ட் ஒன்றில் தனியாக இருக்கும்போது எடுத்துக் கொண்ட புகைப்படம் சமூக வலைதளங்களில் வைரலாக பரவியது. இதனைத் தொடர்ந்து, திரைத்துறையைச் சேர்ந்த அந்தணன் இதுகுறித்து பேசிய வீடியோவும் இணையத்தில் பெருமளவில் பகிரப்பட்டு வருகிறது.
அந்த வீடியோவில் அந்தணன் கூறியதாவது: “இதுபோன்ற விஷயங்களை நாம் ஆழமாக ஆராய முடியாது. ஆனால் விஜய்யுக்கும் த்ரிஷாவுக்கும் இடையில் சினிமா எல்லையைத் தாண்டி ஏதோ ஒன்று உள்ளது என்று திரைத்துறை வட்டாரங்களில் பேசப்படுகிறது. அதனால்தான், த்ரிஷா எதையும் சமூக வலைதளங்களில் பதிவிடும் போதெல்லாம் அது பெரும் விவாதமாக மாறுகிறது.
திரைத்துறையில் ‘நெருப்பு இல்லாமல் புகையாது’ என்ற நிலை உள்ளது. ஏற்கனவே இப்படிப்பட்ட விஷயங்கள் பல முறை உண்மையாக மாறியுள்ளன. இந்த சூழலில், இப்படியான விவாதங்களை விஜய்யும் எதிர்பார்த்திருக்கிறார் என்று தோன்றுகிறது.
இதையும் படியுங்க : இன்னொரு திருமணம் செய்வதில் தப்பே இல்லை : பகீர் கிளப்பிய நயன்தாரா!
அவருக்கு வேண்டுமென்றால், த்ரிஷாவிடம், ‘பொதுவெளியில் வாழ்த்த வேண்டாம், தனிப்பட்ட முறையில் போன் மூலம் சொல்லுங்கள்’ என்று கூற முடியும். ஆனால் இவ்வாறு பொது வெளியில் த்ரிஷாவின் வாழ்த்துகளை அனுமதிப்பதன் மூலம், இருவரின் உறவை மெல்லமெல்ல வெளிப்படுத்த நினைக்கின்றார் போலும்.”
இந்த கருத்துக்கள் சமூக வலைதளங்களில் பெரும் விவாதமாக மாறியுள்ளன. அதோடு, விஜய் தொடங்கிய நிகழ்வுகளில் அவரது மனைவி கலந்து கொள்ளாதது மற்றும் அது சந்தேகங்களுக்கு வழிவகுத்தது என்பதும் மீண்டும் பேசப்பட்டது.
இதுபோன்ற சூழ்நிலையில், கீர்த்தி சுரேஷின் திருமணத்துக்கு விஜய்யும் த்ரிஷாவும் தனி விமானத்தில் பயணம் செய்தது குறித்து வெளியான வீடியோ மேலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
விஜய்யின் அரசியல் செல்வாக்கை எதிர்க்க விரும்பும் சிலர் திட்டமிட்டு இவ்வாறான கருத்துக்களை உருவாக்கி வெளியிடுகிறார்கள் என்றும், விஜய்யின் உண்மையான ரசிகர்கள் இதை ஆதரிக்க மாட்டார்கள் என்றும் சமூக வலைதளங்களில் கருத்துகள் பரவலாக பேசப்பட்டு வருகின்றன.
பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜூனின் தந்தையான அல்லு அரவிந்த் தெலுங்கு சினிமாவின் முன்னணி தயாரிப்பாளர் ஆவார். இவர் தமிழில்…
டாப் நடிகை தென்னிந்தியாவின் டாப் நடிகையாக சமீப காலங்களில் வலம் வருபவர் சமந்தா. கடந்த 2022 ஆம் ஆண்டு தனக்கு…
திருவள்ளூர் அடுத்த புல்லரம்பாக்கம் பகுதியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ஹரி ஜோதி என்பவரின் இரண்டாவது மகன் அஜய்(22). இவர் நண்பர்களுடன்…
ரேஸர் அஜித்குமார் அஜித்குமார் தற்போது உலக நாடுகள் பலவற்றில் கார் பந்தயங்களில் மிகவும் தீவிரமாக ஈடுபாடு காட்டி வருகிறார். சில…
பீனிக்ஸ் விழான்? விஜய் சேதுபதியின் மகனான சூர்யா சேதுபதி கதாநாயகனாக அறிமுகமாகியுள்ள திரைப்படம் “பீனிக்ஸ்”. இத்திரைப்படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகியுள்ள…
அஜித் குமார் கொலைக்கு பிறகு தனிப்படையை அரசு கலைத்திருப்பது வரவேற்கத்தக்கது.மடப்புரத்தில் முன்னாள் அமைச்சர் திருநாவுக்கரசர் தெரிவித்துள்ளார். இதையும் படியுங்க: திமுக…
This website uses cookies.