தமிழ் சினிமாவில் இசையமைப்பாளராக இருந்து அதன் பின்னர் ஹீரோவாக நடித்து மிகப்பெரிய அளவில் புகழ் பெற்றிருப்பவர் தான் விஜய் ஆண்டனி. தற்போது இவரது நடிப்பில் “மழை பிடிக்காத மனிதன்” என்ற திரைப்படம் இன்று வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
விஜய் மில்டன் இயக்கத்தில் வெளிவந்திருக்கும் இந்த திரைப்படத்தின் ப்ரோமோஷன்களில் கடந்து சில நாட்களாக விஜய் ஆண்டனி தொடர்ச்சியாக கலந்து கொண்டு வந்தார். குறிப்பாக இசை வெளியீட்டு விழா, செய்தியாளர் சந்திப்பு, பட ப்ரோமோஷன் , இப்படி அந்த திரைப்படத்தின் விழாவிற்கு சென்று தொடர்ச்சியாக பிரமோஷன் செய்து வந்தார்.
அப்போது செருப்பு இல்லாமலே காணப்பட்ட விஜய் ஆண்டனியிடம் தொகுப்பாளர் ஒருவர்…. ஏன் செருப்பு இல்லாமல் நடக்குறீங்க என்ற கேள்வி கேட்டதற்கு விஜய் ஆண்டனி… எனக்கு திடீரென செருப்பு இல்லாமல் நடக்க வேண்டும் என்று தோன்றியது. செருப்பு இல்லாமல் நடந்து பார்த்தேன். அது எனக்கு பிடித்திருந்தது அது மட்டும் இல்லாமல் எனக்குள் ஒரு மாற்றத்தை அது ஏற்படுத்தியது .
எனவே உங்கள் மனதிற்கு உத்வேகம் வேண்டுமா? மனம் சோர்வா இருக்கா? உங்களுக்கு ஏதேனும் மாற்றம் வேண்டுமா? அப்போ நிச்சயமா செருப்பு இல்லாமல் நடந்து பாருங்க? என்னைப் போன்றே உங்களுக்கும் ஏதேனும் மாற்றம் ஏற்படும் என கூறினார்.
விஜய் ஆண்டனியின் இந்த பேச்சு மருத்துவ ரீதியாக பெரும் சர்ச்சையை கிளப்பி இருக்கிறது. இதுகுறித்து கூறிய அவர் செருப்பு இல்லாமல் நடந்தால் அக்லோஸ்டோமோ குடற்புழுக்கள் ரத்தத்தை உறிஞ்சி ரத்த சோகையை உருவாக்கும் .
இந்த ரத்த சோகையால் பெண்கள், பச்சிளம் குழந்தைகள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். கர்ப்பகால மரணம் தொடங்கி குழந்தைகள் மரணம் இந்த ரத்தசோகை கொண்டுவந்துவிடும்.
எனவே இதுபோன்ற உயிரை கொள்ளும் நோய்களில் இருந்து இருந்து தப்பிக்க செருப்பு அணிவது தான் சிறந்தது. எனவே சிலர் அரைகுறையாக எதையாவது தெரிந்து கொண்டு பேசுவதை நம்பி ரத்த சோகைக்கு ஆளாகாதீர்கள் என்று அந்த மருத்துவர் விஜய் ஆண்டனியை கடுமையாக சாடி உள்ளார். முன்னதாக நடிகை நயன்தாரா செம்பருத்தி டீ குறித்து கருத்து பேசி சர்ச்சையில் சிக்கியது குறிப்பிடதக்கது.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.