தேமுதிக தலைவரும், நடிகருமான விஜயகாந்த் (71) உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 28-ஆம் தேதி காலை காலமானார். பின்னர் விஜயகாந்த் உடல் பொதுமக்கள் அஞ்சலி செலுத்த அடுத்த மறுநாள் தீவுத்திடலில் வைக்கப்பட்டிருந்தது. அங்கு அரசியல் கட்சி தலைவர்கள், தொண்டர்கள் மற்றும் பொதுமக்கள் பலர் இறுதி அஞ்சலி செலுத்தினர்.
இதைத்தொடர்ந்து, அன்று மாலை சென்னை, கோயம்பேட்டில் உள்ள தேமுதிக கட்சி தலைமை அலுவலகத்தில் கேப்டன் விஜயகாந்தின் உடல் 72 குண்டுகள் முழங்க அரசு மரியாதையுடன் நல்லடக்கம் செய்யப்பட்டது. விஜயகாந்த் உடலுக்கு திரைத்துறையை சேர்ந்த பல பிரபலங்கள் நேரில் வந்து அஞ்சலி செய்து அவரது குடும்பத்தினருக்கு ஆழ்ந்த இரங்கலை தெரிவித்தார்கள்.
ஆனால், அவர்கள் அத்தனை பேரை காட்டிலும் நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனியின் செயல் அனைவரையும் நெகிழ செய்தது. ஆம், விஜய் ஆண்டனி மாலை அணிவித்து விஜயகாந்த் உடலை பார்த்து கையெடுத்து கும்பிட்டார். பின்னர் அவரது முகத்திற்கு முத்தமிட்டு கண்கலங்கிப்படி ஒரு நிமிடம் மௌன அஞ்சலி செலுத்தினார். அதன் பின்னர் அந்த ஐஸ் பாக்சின் மீதிருந்த உதிர்ந்த பூ இதழ் ஒன்றை எடுத்து தன் சட்டை பாக்கெட்டிற்குள் போட்டுக்கொண்டார்.
அதன் பின்னர் அருகில் நின்று அழுதுக்கொண்டிருந்த விஜயகாந்தின் மனைவி பிரேமலதா விஜயகாந்தை பார்த்து அவரது கைகளை பிடித்துக்கொண்டு ஆறுதல் கூறினார். விஜய் ஆண்டனியின் இந்த உணர்ச்சிமிக்க செயல் அங்கிருந்த அனைவரையும் மெய்சிலிர்க்க வைத்தது. கூட்டத்தில் இருந்த அனைவரும் அவர் முத்தமிட்டதை பார்த்து கைதட்டினார்கள். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாக எந்த ஒரு நடிகரும் இதுபோன்று செய்யவில்லை என பலர் கருத்துக்களை கூறி வருகின்றனர்.
பாடுவதற்கு தடை 2018 ஆம் ஆண்டு பாடகி சின்மயி பாடலாசிரியர் வைரமுத்து மீது Me Too புகாரை எழுப்பியிருந்த செய்தி…
டாக்டர் அட்லீ சென்னை சத்யபாமா பல்கலைக்கழகத்தில் இயக்குனர் அட்லீக்கு இன்று கௌரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது. தமிழில் “ராஜா ராணி”,…
பிரதமர் வீடு வழங்கும் திட்டம் (PMAY), பிரதமர் மீன்வளத் திட்டம் (PMMSY), உயிர்நீர் (Jaljeevan) எனப் பிரதமரின் பெயரையும்,பிரதமரின் முகத்தையும்…
சின்மயி VS தீ “தக் லைஃப்” திரைப்படத்தில் இடம்பெற்ற முத்தமழை பாடலை பாடகி தீ பாடியிருந்தார். ஆனால் அவரால் “தக்…
கழிவறையில் ரகசிய கேமரா வைத்து பெண் போலீசை வீடியோ எடுத்து மிரட்டிய சக போலீசார் சிக்கியுள்ளார். கேரள மாநிலம் இடுக்கி…
சூர்யா 45 “ரெட்ரோ” திரைப்படத்தை தொடர்ந்து சூர்யா ஆர்ஜே பாலாஜி இயக்கத்தில் தனது 45 ஆவது திரைப்படத்தில் நடித்துள்ளார். இதில்…
This website uses cookies.