தமிழ் சினிமாவில் முன்னணி நட்சத்திர நடிகராக சிறந்து விளங்கி வரும் நடிகர் விஜய் தற்போது வெங்கட் பிரபு இயக்கத்தில் நடித்து வருகிறார். இதனிடையே அவர் அரசியலில் இறங்கி மும்முரமாக அதில் ஈடுபட்டும் வருகிறார். இப்படி பிஸியாக இருந்து வரும் நடிகர் விஜய் அண்மையில் தான் ஆசை ஆசையாய் வாங்கிய Rolls-Royce ghost என்ற சொகுசு காருக்கு வரி கட்ட முடியவில்லை என்ற காரணத்தால் விலைக்கு விற்றுவிட்டார்.
விஜய் கடந்த 2012 ஆம் ஆண்டு பிரிட்டனிலிருந்து Rolls-Royce ghost என்ற சொகுசு கார் ஒன்றை வாங்கி இருந்தார். அந்த காரின் வாகன பதிவுக்காக வட்டார போக்குவரத்து அலுவலகத்திற்கு கொண்டு சென்ற போது காரின் நுழைவு வரி செலுத்தினால் வாகன பதிவு செய்ய முடியும் எனவே விஜய் நுழைவரி செலுத்தவேண்டும் என வணிக வரித்துறை உதவி ஆணையர் உத்தரவு பிறப்பித்தார்.
இந்த விஷயம் சமூக வலைதளங்களில் கடந்த 2021 ஆம் ஆண்டு மிகவும் பரபரப்பாக பேசப்பட்டது. இப்படி விஜய் ஆசை ஆசையாய் வாங்கிய. Rolls-Royce காரை ரூ. 2.6 கோடிக்கு விற்பனை செய்துவிட்டார். இந்த கரை விஜய் ரூ. 3.5 கோடிக்கு வாங்கியிருந்தார். “Empire Autos” நிறுவனம் விஜய் பயன்படுத்திய Rolls-Royce காரை வித்தியாசமான ஆங்களில் வீடியோக்களை எடுத்து சமூக வலைதளத்தில் வெளியிட்டு விளம்பரம் செய்தது.
இந்நிலையில் தற்ப்போது கிடைத்துள்ள தகவலின்படி, விஜய் தான் வைத்திருந்த மற்றொரு கார் ஆன Volvo காரையும் விற்பனை செய்துவிட்டாராம். மேலும், தற்போது புதிதாக Lexus எனும் சொகுசு கார் ஒன்றை விஜய் வாங்கியுள்ளாராம். அதன் விலை. ரூ. 65 லட்சம் முதல் துவங்கி ரூ. 2.80 கோடிக்கும் மேல் உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த Lexus காரை தான் விக்ரம் படத்தை இயக்கிய இயக்குனர் லோகேஷ் கனகராஜுக்கு உலகநாயகன் கமல் ஹாசன் பரிசாக வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.
பிரபாஸின் புதிய முயற்சி பிரபாஸ் 2002 ஆம் ஆண்டில் இருந்து தெலுங்கு சினிமா உலகில் ஜொலித்து வந்தாலும் “பாகுபலி” திரைப்படத்திற்குப்…
மதுரை மேற்கு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட கரிசல்குளம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் ரூபாய் 15 லட்சம் மதிப்பீட்டில் கூடுதல் கட்டிடத்திற்கான…
மதுரை பாண்டிகோவில் அருகே ஜூன் 22 அன்று இந்து முன்னணி அமைப்பின் சார்பில் நடைபெறவுள்ள முருக பக்தர்கள் மாநாட்டை முன்னிட்டு…
மோஸ்ட் வாண்டட் திரைப்படம் 2018 ஆம் ஆண்டு வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த “வடசென்னை” திரைப்படம் ரசிகர்களின் மத்தியில் மிகப்பெரிய…
காதல் விவகாரத்தில் சிறுவன் கடத்தப்பட்ட வழக்கில் தொடர்புடையதாக கூறி நேற்று 300க்கும் மேற்பட்ட போலீசார் ஜெகன்மூர்த்தியிடம் விசாரணை செய்வதற்காக திருவள்ளுர்…
இந்தியாவின் முன்னணி இயக்குனர் இந்திய சினிமாவின் முன்னணி இயக்குனராக வலம் வரும் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது சிவகார்த்திகேயனை வைத்து “மதராஸி” திரைப்படத்தை…
This website uses cookies.