தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையாக ஜொலித்துக்கொண்டிருக்கும் சமந்தா சென்னை பல்லாவரத்து பெண் என்பதே பலரால் நம்ப முடியாத உண்மை. இவர் அப்பா தெலுங்கு, அம்மா மலையாளி. ஆனால் தான் பிறந்து வளர்ந்ததெல்லாம் தமிழ் நாட்டில் என்பதால், தென்னிந்திய கலவையாக மிளிரும் சமந்தா ஆரம்பத்தில் மாடலிங் பெண்ணாக ரூ. 100 ரூ. 200க்கெல்லாம் கடைகளில் வெல்கம் கேர்ளாக பணியாற்றி இருக்கிறார்.
தமிழில் மாஸ்கோவின் காவிரி படத்தின் மூலம் சினிமாவில் நடிகையாக அறிமுகமானார். தொடர்ந்து விண்ணைத்தாண்டி வருவாயா, நான் ஈ, நீ தானே என் பொன்வசந்தம் , கத்தி , தெறி சூப்பர் டீலக்ஸ் என பல்வேறு ஹிட் படங்களில் நடித்துள்ளார். இதனிடையே தெலுங்கு நடிகர் நாக சைதன்யாவை காதலித்து 2017 ஆம் ஆண்டு திருமணம் செய்து கொண்டார்.
திருமணத்திற்கு பின்னரும் தொடர்ச்சியாக படங்களில் நடித்து வந்த சமந்தா மிகவும் மோசமான படுக்கையறை காட்சிகளில் நடித்து முகம் சுளிக்க வைத்தார். இதனை நாகசைதன்யா எச்சரிக்க அவரை விவாகரத்து செய்துவிட்டார். விவாகரத்துக்கு பின்னர் தொடர்ந்து இருவரும் நடித்து வருகிறார்கள். இதனிடையே சமந்தா மயோசிட்டிஸ் நோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை எடுத்துவந்தார்.
தொடர்ந்து அவர் உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்திக்கொண்டே குஷி திரைப்படங்களில் நடித்து வருகிறார். இந்த படத்தில் நடித்த போது விஜய் தேவர்கொண்டாவுடன் ஏற்பட்ட நெருங்கிய நட்பு காதலாக மாறியுள்ளதாக கிசு கிசு செய்திகள் வெளியாகியுள்ளது. அதை உறுதிப்படுத்தும் வகையில் அவர்களே நாளுக்கு நாள் நெருக்கமாக பழகி வருகிறார்கள். இந்நிலையில் தற்போது விஜய் தேவரக்கொண்டா படுக்கையில் இருந்துகொண்டு நள்ளிரவு நேரத்தில் சமந்தாவிற்கு போன் அடித்து,
“உங்களை மிஸ் பண்ணினேன் என்றார் விஜய் தேவரகொண்டா. பின்னர் நான் நாக் நாக் ஜோக் சொல்லப் போகிறேன் என விஜய் தேவரகொண்டா கூற சமந்தாவோ, லாஸ் ஏஞ்சல்ஸில் 1.30 மணி, இந்த நேரத்தில் நாக் நாக் ஜோக் கேட்க விரும்பவில்லை என்றார். ஆனாலும் விஜய் தேவரகொண்டா விடுவதாக இல்லை. இதையடுத்து சரி சொல்லு என்று சமந்தா கேட்க…. விஜய் தேவர்கொண்டா நாக் நாக் என சொன்னார். அது யார் என சமந்தா கேட்க , நா என சொல்லி குஷி படத்தில் வரும் நா ரோஜா நுவ்வே பாடலை பாட ஆரம்பித்தார் விஜய். இந்த வீடியோ இணையத்தில் வெளியிட்டு வித்தியாசமாய் குஷி படத்திற்கு ப்ரோமோஷன் செய்துள்ளனர். அதுக்காக இப்படியா? நடுராத்திரியில் போன் அடித்ததால் நாங்க தப்பா புரிஞ்சிக்கிட்டோம் என ரசிகர்கள் கமெண்ட்ஸ் செய்துள்ளனர்.
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
பாமகவில் தற்போது தந்தை மகன் மோதல் முற்றியுள்ளது. பாமக நிறுவனர் ராமதாஸ், தனது மகன் அன்புமணி மீது ஏராளமான குற்றச்சாட்டை…
This website uses cookies.