சினிமா / TV

தன் வாயால் தானே கெட்ட விஜய் தேவரகொண்டா! பாய்ந்தது வன்கொடுமை தடுப்புச் சட்டம்?

இந்தியர்களை அதிரவைத்த சம்பவம்

காஷ்மீரின் பஹல்காம் பகுதியில் நடந்த பயங்கரவாதிகளின் தாக்குதல் சம்பவம் ஏற்படுத்திய அதிர்ச்சியில் இருந்து இன்னும் பல இந்தியர்கள் மீளவே இல்லை. இத்தாக்குதலில் 22 சுற்றுலாப்பயணிகள் ஈவு இரக்கமின்றி கொல்லப்பட்டனர். இந்த சம்பவத்தால் உட்சகட்ட கோபத்திற்கும் சோகத்திற்கும் உள்ளாகியுள்ளனர் இந்தியர்கள். 

இதனை தொடர்ந்து சமூக வலைத்தளங்களில் இந்தியர்கள் பலரும் பாகிஸ்தானுக்கு தக்க பதிலடி கொடுக்க வேண்டும் என கருத்து தெரிவித்து வருகின்றனர். இந்த நிலையில் சமீபத்தில் “ரெட்ரோ” திரைப்படத்தின் நிகழ்ச்சி ஒன்றில் கலந்துகொண்ட நடிகர் விஜய் தேவரகொண்டா பாகிஸ்தானியர்களை பற்றி கூறிய கருத்து சர்ச்சையை கிளப்பியது. 

பாய்ந்த வன்கொடுமை தடுப்புச் சட்டம்!

“ரெட்ரோ” திரைப்பட விழாவில் பேசிய விஜய் தேவரகொண்டா, “பாகிஸ்தானியர்கள் குறைந்த பட்ச பொது அறிவு கூட இல்லாமல் பழங்குடியினர்களைப் போல் நடந்துகொள்கிறார்கள்” என கருத்து தெரிவித்து இருந்தார். இவரது கருத்து பழங்குடியினர்களை கொச்சைப்படுத்துவது போல் இருப்பதாக கடும் எதிர்ப்புகள் கிளம்பியது.

அதன் பின் இவ்வாறு தான் பேசியதற்கு மன்னிப்பு கேட்டார் விஜய் தேவரகொண்டா. எனினும் அவர் மீது SC/ST வன்கொடுமை தடுப்புச் சட்டத்திற்கு கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இச்செய்தி அவரது ரசிகர்களுக்கு அதிர்ச்சியளித்துள்ளது. 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.