ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் அஜித்குமார் நடித்துள்ள “குட் பேட் அக்லி” திரைப்படம் வருகிற 10 ஆம் தேதி வெளியாகவுள்ள நிலையில் அஜித் ரசிகர்கள் கொண்டாட்டத்திற்கு தயாராகி வருகின்றனர். இதற்கு முன்பு பிப்ரவரி மாதம் வெளியான “விடாமுயற்சி” திரைப்படம் ரசிகர்களுக்கு திருப்தியில்லாத அஜித் திரைப்படமாக அமைந்தது. ஆதலால் “குட் பேட் அக்லி” திரைப்படத்திற்கு மிகுந்த ஆவலோடு அஜித் ரசிகர்கள் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.
“குட் பேட் அக்லி” திரைப்படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து ரசிகர்களின் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றது. இத்திரைப்படம் ஒரு டார்க் காமெடி ஆக்சன் திரைப்படமாக உருவாகியுள்ளதாக டிரைலரை பார்க்கையில் தெரிய வருகிறது. இந்த நிலையில் இத்திரைப்படத்தை குறித்த ஒரு முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளிவந்துள்ளது.
விஜய் தனது அரசியல் மேடையில் பேசி மிகப் பெரிய கைத்தட்டல் வாங்கிய வசனம்தான் “வாட் ப்ரோ”. இந்த நிலையில் இந்த வசனத்தை அஜித்குமார் “குட் பேட் அக்லி” திரைப்படத்தில் பேசியுள்ளதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. அதுமட்டுமல்லாது இந்த வசனத்தை இடைவேளை காட்சியாக வைத்துள்ளார்களாம். இவ்வாறு விஜய்யின் வசனத்தை அஜித் பேசியிருப்பதாக வெளியாகும் தகவல் விஜய் ரசிகர்களை சற்று கோபத்தில் ஆழ்த்தியுள்ளதாக கூறப்படுகிறது.
சென்னையில் நிருபர்கள் சந்திப்பில் பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் ஆலோசித்தது குறித்து பேசினார். நடுத்தர…
லோகி யுனிவர்ஸ் இயக்குனர் லோகேஷ் கனகராஜ் Lokesh Cinematic Universe என்ற ஒன்றை உருவாக்கி கோலிவுட்டில் ஒரு புதிய வரலாற்றையே…
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி முருகன் கோயில் மாட வீதியில் வேல் அமைந்துள்ள பகுதியில் காலை பக்தர்கள் தரிசனம் செய்து கொண்டிருந்தனர்.…
கனிமா… தமிழ் சினிமா இசை உலகில் மிகவும் தனித்துவமான இசையமைப்பாளராக இயங்கி வருபவர் சந்தோஷ் நாராயணன். தமிழ் சினிமா இசை…
விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை துவங்கி அரசியல் பணிகளில் தீவிரம் காட்டி வருகிறார். அடுத்த வரும் தமிழக…
ரயிலில் பயணம் செய்வோர் டிக்கெட் முன்பதிவு செய்யும் மறையில் புதிய மாற்றங்களை அறிவித்துள்ளது இந்திய ரயில்வே. இதையும் படியுங்க: என்னை…
This website uses cookies.