கடந்த இரண்டு வருடங்களாக 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களை பிடித்த மாணவ மாணவியர்களுக்கு ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் வழங்கி வருகிறார் விஜய். அந்த வகையில் சமீபத்தில் 10 மற்றும் 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டன. இந்த நிலையில் 2025 ஆம் ஆண்டிற்கான 10 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத் தேர்வில் முதல் மூன்று இடங்களைப் பிடித்த மாணவ மாணவியர்களுக்கு விஜய்யின் கையால் ஊக்கத்தொகையும் பாராட்டுச் சான்றிதழும் அளிக்கப்பட உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை தமிழக வெற்றிக் கழகம் வெளியிட்டுள்ளது.
அதாவது இந்த கல்வி விருது வழக்கும் விழா மூன்று கட்டங்களாக நடைபெறவுள்ளதாக தெரிய வந்துள்ளது. இதில் முதல் கட்டமாக வரும் மே 30 ஆம் தேதி மாமல்லபுரத்தில் அமைந்துள்ள ஷெரட்டான் ஹோட்டலில் இக்கல்வி விருது வழங்கும் விழா நடைபெறவுள்ளது.
இந்த முதல் கட்ட கல்வி விருது வழங்கும் விழாவில் தமிழகத்தின் அறியலூர், இராணிப்பேட்டை, கடலூர், கள்ளக்குறிச்சி, கன்னியாகுமரி, காஞ்சிபுரம், சிவகங்கை, சென்னை, திண்டுக்கல், திருவள்ளூர், தேனி, நாகப்பட்டினம், புதுக்கோட்டை, பெரம்பலூர், வேலூர் ஆகிய மாவட்டங்களில் உள்ள சட்டமன்ற தொகுதிகளுக்குட்பட்ட 10 மற்றும் 12 வகுப்பு பொதுத் தேர்வில் சிறந்த மதிப்பெண்களை பெற்ற மாணவர்களுக்கு விஜய் பாராட்டுச் சான்றிதழும் ஊக்கத்தொகையும் வழங்க உள்ளார்.
மன்னிப்பு கேட்க முடியாது “தக் லைஃப்” திரைப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் கமல்ஹாசன் தமிழில் இருந்துதான் கன்னடம் தோன்றியது என்று…
தமிழில் இருந்து தான் கன்னடம் பிறந்தது என தக் லைஃப் பிரமோஷன் நிகழ்ச்சயில் நடிகர் கமல் பேசியது பெரும் சர்ச்சையானது.…
டாப் ஹிட் படங்கள் எஸ்.ஜே.சூர்யா இயக்கிய முதல் திரைப்படம் “வாலி”. இதில் அஜித்குமார் கதாநாயகனாக நடித்திருந்தார். இத்திரைப்படம் மாஸ் ஹிட்…
மதுரை கோச்சடை பகுதியில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் வைத்து மதுரை தேனி திண்டுக்கல் ஆகிய சட்டமன்றத் தொகுதியில் நிறைவு…
முன்னணி காமெடி நடிகர் தமிழ் சினிமாவின் முன்னணி காமெடி நடிகராக வலம் வருகிறார் யோகி பாபு. விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான…
கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெஞ்சல் புயல் காரணமாக தமிழ்நாட்டில் கடலூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை உள்ளிட்ட பகுதிகள் பெரிதும்…
This website uses cookies.