பிரபல இயக்குநராக வலம் வருபவர் எஸ்ஏ சந்திரசேகர் இவரது ஒரே மகன் விஜய். தமிழ் சினிமாவின் உச்ச நடிகராக உள்ள விஜய்க்கு நாடு முழுவதும் கோடிக்கணக்கான ரசிகர்கள் உள்ளனர். நடிகர் விஜய் இன்று தமிழ் சினிமாவில் உச்ச நடிகராக மட்டுமின்றி மாஸ் நடிகராகவும் உள்ளார் என்றால் அதற்கு அடித்தளம் போட்டவர் அவரது அப்பாதான்.
அப்பாவின் இயக்கத்தில் நடிகராக அறிமுகமான விஜய் பின்னர் படிப்படியாக உயர்ந்து இன்று இந்த அளவுக்கு தவிர்க்க முடியாத ஒரு நடிகராக வளர்ந்துள்ளார். இந்நிலையில் கடந்த சில மாதங்களாகவே நடிகர் விஜய்க்கும் அவரது அப்பாவுக்கும் இடையிலான உறவு சரியாக இல்லை என்றும் இருவருக்கும் இடையே பேச்சு வார்த்தை சரியில்லை என்றும் தகவல் வெளியாகி வருகிறது.
இந்நிலையில், ஒரே மகனான விஜய் பெற்றோரின் பிறந்தநாள் விழாவிலும் பங்கேற்கவில்லை, தற்போது சதாபிஷேக விழாவிலும் பங்கேற்கவில்லை என அதிருப்தியை வெளிப்படுத்தி வருகின்றனர்.
கோடிக்கணக்கான ரசிகர்களுக்கு தலைவனாக இருந்து கொண்டு இப்படி பெற்றோரை தவிக்க விடுவது நியாயமில்லை என்றும், ரசிகர்களுக்கு தவறான முன் உதாரணமாக இருக்கக் கூடாது என்றும் சமூக வலைதளங்களில் கருத்து பதிவிட்டு வருந்தனர். என்னதான் கோபம் இருந்தாலும் இதுபோன்ற விசேஷங்களை புறக்கணிப்பது ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் ரசிகர்கள் தெரிவித்து வருகின்றனர்.
தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக திகழ்ந்து வருபவர் நடிகர் விஜய். அவர் நடிப்பில் வாரிசு படம் வரும் ஜனவரி 12 ஆம் தேதி தியேட்டரில் ரிலீஸாகவுள்ளது.
மேலும், வாரிசு படத்தின் ஆடியோ லான்ச் சமீபத்தில் நேரு ஸ்டேடியத்தில் பிரம்மாண்ட முறையில் நடைபெற்ற நிகழ்ச்சிக்கு படக்குழு உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்து கொண்டனர்.
இதில், தளபதி விஜய்யின் தாய் தந்தை எஸ் ஏ சி, ஷோபாவும் கலந்து கொண்டனர். ஏற்கனவே தாய் தந்தையை விஜய் கண்டுக்கொள்ளவில்லை என்ற விமர்சனம் எழுந்து வந்தது. அதேபோல் நிகழ்ச்சியிலும் பெற்றோர்களை துளிக்கூட கண்டுகொள்ளாமல் இருந்ததாகவும் வீடியோ வெளியாகி வைரலானது.
இந்நிலையில் தன் மகன் பற்றிய எதுவும் எங்களுக்கு தெரியாது. தற்போது நடிக்கும் படம் மற்றும் அரசியல் போன்றவற்றை பற்றிக்கூட தெரியாது என்று பத்திரிக்கையாளர்களுக்கு பேட்டிக்கொடுத்து கூறியுள்ளார்.
கண்டபடி பேசிய தயாரிப்பாளர் வேதிகா, யோகி பாபு, சாந்தினி, மொட்டை ராஜேந்திரன் உள்ளிட்ட பலரது நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் “கஜானா”.…
பிறகு பாஜக மாநில பொது செயலாளர் கருப்பு முருகானந்தம் செய்தியாளர்களிடம் பேசுகையில், இன்று தமிழகத்தில் பல்வேறு அரசியல் கட்சிகள் பயங்கரவாதிகளுக்கு…
பாகிஸ்தான் ஆதரவு பெற்ற தீவிரவாதிகளின் காஷ்மீர் பஹல்காமில் தாக்குதல் நடத்தியதை கண்டித்து திண்டுக்கல் மணிக்கூண்டு அருகில் பாஜக சார்ப்பில் கண்டன…
துணிச்சல் நடிகை நடிகை திரிஷா தனது 16 வயதிலேயே மாடலிங் துறைக்குள் வந்தவர். அதனை தொடர்ந்து “ஜோடி” திரைப்படத்தில் சிறு…
சினிமாவில் நடிக்க வாய்ப்பு தருவதாக கூறி இளம்பெண்ணை பலமுறை பாலியல் பலாத்காரம் செய்ததாக நடிகர் மீது புகார் அளிக்கப்பட்டுள்ளது. மகாராஷ்டிரா…
தனது வாகனத்தின் மீது மோதிய மர்ம நபர்கள் மீது காவல்துறையினரிடம் மதுரை ஆதினம் நேர்மையாக புகார் அளித்திருக்கலாமே? ஏன் புகார்…
This website uses cookies.