சினிமா / TV

விஜய் இல்லாமல் நடந்த எஸ்ஏசி வீட்டின் கிரஹப்பிரவேசம்? என்னதான் சண்ட இருந்தாலும் இப்படியா?

விஜய்யை ஹீரோவாக்கிய எஸ்ஏசி…

தனது மகன் விஜய்யை எப்படியாவது தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக ஆக்கிவிட வேண்டும் என்ற லட்சியத்தில் விடாபிடியாக இருந்தவர்தான் எஸ் ஏ சந்திரசேகர். தொடக்கத்தில் விஜய்யை வைத்து பல திரைப்படங்களை அவர் இயக்கினார். அதன் பின் விஜய் வெவ்வேறு இயக்குனர்களின் திரைப்படங்களில் நடிக்கத் தொடங்கினாலும் அவரது தந்தையே அவருக்கு பக்க பலமாக இருந்தார். விஜய் எப்படிப்பட்ட படங்கள் நடிக்க வேண்டும், எப்படிப்பட்ட படங்கள் நடிக்க கூடாது என்பதை முடிவெடுக்கும் இடத்தில் எஸ்ஏசி இருந்ததாக கூறப்படுகிறது.  

இவ்வாறு தனது மகன் விஜய், தமிழ் சினிமாவின் டாப் நடிகராக உயர்வதற்கு பக்க துணையாக இருந்தார். ஆனால் கடந்த சில வருடங்களாக விஜய்க்கும் அவரது தந்தைக்கும் இடையே பிரச்சனைகள் ஏற்பட்டதாகவும் விஜய் தனது தந்தையிடம் அவ்வளவாக பேசிக்கொள்வது இல்லை எனவும் கூறப்படுகிறது. இது குறித்து எஸ்ஏசியே ஒரு விழாவில் பேசியபோது, “ஒரு வீட்டில் அப்பாவுக்கும் மகனுக்கு இடையே வழக்கமாக எப்படிப்பட்ட பிரச்சனை வருமோ அதேதான் எனக்கும் விஜய்க்குமான பிரச்சனை. அவ்வளவுதான்” என கூறியிருந்தார். 

விஜய் இல்லாமல் நடந்த கிரஹப்பிரவேசம்

இந்த நிலையில் எஸ்ஏசி-ஷோபா ஆகியோர் புது வீடு ஒன்றை  கட்டியுள்ளனர். அந்த வீட்டின் கிரஹப்பிரவேசத்தில் உறவினர்கள் பலரும் கலந்துகொண்டனர். ஆனால் நடிகர் விஜய், அவரது மனைவி, மகன் என எவரும் கலந்துகொள்ளவில்லை.

இது இணையத்தில் பேசுபொருளாகியுள்ளது. “என்னதான் சண்டை இருந்தாலும் கிரஹப்பிரவேசத்திற்கு கூடவா வராமல் இருப்பது” என இணையத்தில் பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர். 

Arun Prasad

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.