நடிகபிர் விஜய் நடிப்பில் கடந்த அக்டோபர் 19ம் தேதி வெளியான திரைப்படம் லியோ. சுமார் ரூ. 300 கோடியில் உருவான இத்திரைப்படம் உலகம் முழுவதும் இதுவரை ரூ. 550 கோடிக்கு மேல் வசூல் ஈட்டி சாதனை படைத்துள்ளது. இந்நிலையில் இப்படத்தின் வெற்றிவிழா மிக பிரம்மாண்டமாக நேரு உள்விளையாட்டு அரங்கில் நடைபெற்றது.
இந்த வெற்றி விழாவில் நடிகர் விஜய், த்ரிஷா, மிஷ்கின், அர்ஜுன், கௌதம் மேனன், மன்சூர் அலிகான், மரியம் ஜார்ஜ், ‘பிக் பாஸ்’ ஜனனி, மேத்யூ தாமஸ், மடோனா செபாஸ்டியன் மற்றும் படத்தொகுப்பாளர் பிலோமின் ராஜ், கலை இயக்குநர் சதீஷ் குமார், இயக்குனர் ரத்தினகுமார் , நடிகர் விஜய்யின் தாயார் ஷோபா உள்ளிட்ட பலர் பங்கேற்றுள்ளனர்.
இவ்விழாவில் பேசிய இயக்குனர் ரத்தினகுமார், ” நான் சின்ன வயசில் இருந்தே விஜய்யின் தீவிர ரசிகன். மாஸ்டர் படத்தில் வாத்தி ரெய்டு பாடல் எழுதியபோதே உண்மையிலே நெய்வேலியில் ரைட் வந்துவிட்டார்கள். இப்போ லியோ படத்தின் ” நா ரெடி தான் வரவா” பாடல் வெளியானதும் எவ்வளவு பிரச்சனை கிளம்பிவிட்டார்கள் என்பது உங்களுக்கே தெரியும்.
விஜய் மற்றவர்கள் போன்று இல்லை. அவர் மிகவும் தாழ்மை குணம் கொண்டவர். யாரையும் நிற்கவைத்து பேசவே மாட்டார். உயர்ந்தவர், தாழ்ந்தவர் என எப்போதும் வித்தியாசம் பார்க்கவே மாட்டார். அவருக்கு எல்லோருமே சரிசமம் ஆனவர்கள். எனவே “எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் பசித்தால் கீழே வந்து தானே ஆக வேண்டும்” என்று ரத்ன குமார் பேசி பரபரப்பை கிளப்பியுள்ளார்.
இதற்கு முன்னதாக ரஜினி சொன்ன, காக்கா மற்றும் பருந்து கதைக்கு பதிலடி கொடுத்து விமர்சிக்கும் வகையில் ரத்தினகுமார் பேசியிருந்தார். ஒரு வளர்ந்து வரும் இயக்குனர் சினிமா துறையின் மிகப்பெரிய ஜாம்பவான் சூப்பர் ஸ்டார் ரஜினியை இப்படி சல்லித்தனமாக வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசுவதா? என திரைத்துறை சேர்ந்த பலர் அவரை கடுமையாக திட்டி தீர்த்து வருகின்றனர்.
ரத்தினகுமாரின் இந்த புத்தி மழுப்பலான பேச்சுக்கு அதே மேடையில் பரிகாரம் செய்துள்ளார் தளபதி விஜய். ஆம், நடிகர் விஜய் பேசியபோது, ” ஒரே ஒரு புரட்சி தலைவர் தான், ஒரே ஒரு கேப்டன் தான், ஒரே ஒரு உலக நாயகன் தான், அதேபோல ஒரே சூப்பர் ஸ்டார் தான், ஒரே தல தான் என்று கூறி ரத்தினகுமாரின் சல்லித்தனத்திற்கு பதிலடி கொடுத்தார். விஜய் பிழைக்க தெரிந்தவர்பா…. அப்புறம் பொழப்பு நடத்தணும்ல என ரஜினி ரசிகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.
ரத்தினகுமாரின் இந்த பேச்சை சமூகவலைத்தளங்களில் மிகவும் மோசமாக விமர்சித்து வரும் ரஜினி ரசிகர்கள், அப்போ “ரஜினி சொன்ன காக்கா விஜய் தான்” என்று நீங்களே ஒதுக்கிட்டீங்களா? என ட்ரோல் செய்து தள்ளியுள்ளனர். அதுக்காகவா இத்தனை கோடி செலவு பண்ணி சக்ஸஸ் மீட் நடத்துனீங்க? அட சைக்…. என்றெல்லாம் பங்கமாக கலாய்த்து தள்ளியுள்ளனர்.
திருப்பூரைச் சேர்ந்த தமிழர் ஒருவர் கத்திகுத்தால் உயிரிழந்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழகத்தின் திருப்பூர் மாவட்டத்தின் படியூர் பகுதியைச்…
தொடர்ந்து தோல்வி படங்கள்? கோலிவுட்டின் முன்னணி நடிகராக சீயான் விக்ரம் வலம் வந்தாலும் “தெய்வத்திருமகள்” திரைப்படத்திற்குப் பிறகு சொல்லிக்கொள்வது போல்…
கைமாறிய STR 49 சிம்புவின் 49 ஆவது திரைப்படத்தை முதலில் ராம்குமார் பாலகிருஷ்ணன் இயக்குவதாக இருந்தது. இத்திரைப்படத்தில் சந்தானம் காமெடி…
பின்னர் முனைவர் வைகை செல்வன் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டி, திருச்சியில் திருமாவளன் அவர்களுடன் நிகழ்ந்த சந்திப்பை பற்றி கேள்வி எழுப்பிய…
மேலை நாடுகளில் மருத்துவ கல்வி பயில விரும்பும் மாணவர்களுக்கு தேவையான இலவச நீட் பயிற்சி, இலவச கணினி, புத்தகங்கள், மருத்துவ…
தூக்கத்தை கெடுத்த மதுபாலா பாலச்சந்தரின் “அழகன்” திரைப்படத்தின் மூலம் சினிமாவிற்குள் அடியெடுத்து வைத்தவர் மதுபாலா. அதனை தொடர்ந்து தமிழில் “ரோஜா”,…
This website uses cookies.