சினிமா / TV

வில்லனாக நடிப்பாரா விஜய்சேதுபதி…கொக்கி போடும் வில்லங்கமான இயக்குனர்.!

பிரபாஸுடன் மோதும் விஜய்சேதுபதி

மக்கள் செல்வன் விஜய் சேதுபதி “மகாராஜா” படத்தின் வெற்றிக்குப் பிறகு ஹீரோவாக தொடர்ந்து கலக்கி வரும் நிலையில்,அவர் மீண்டும் பான் இந்தியா படமொன்றில் வில்லனாக நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

தமிழ் சினிமாவில் ஹீரோ,வில்லன்,குணச்சித்திரம் என எந்தக் கதாபாத்திரமாக இருந்தாலும் தனது நடிப்பால் ரசிகர்களை கவர்ந்தவர் விஜய் சேதுபதி.தமிழ் மட்டுமல்லாமல் இந்தி,தெலுங்கு,மலையாளம் போன்ற மொழிகளிலும் நடித்து வருகிறார்.இவர் ஷாருக்கானுடன் “ஜவான்” படத்தில் வில்லனாக நடித்தபோது,அந்த படம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்தது.இதனால்,பாலிவுட்டில் அவருக்கு அதிக வில்லன் கதாபாத்திரங்கள் வரும் நிலை உருவானது.ஆனால் “வில்லனாக மட்டும் பயணிக்க மாட்டேன்” என்ற முடிவோடு விஜய்சேதுபதி இருந்தார்.

இதையும் படியுங்க: எதிர்பார்ப்பை எகிற வைத்ததா மோகன்லாலின் ‘எம்புரான்’…படத்தின் விமர்சனம் இதோ.!

சமீபத்தில் இவருடைய நடிப்பில் வெளியான “மகாராஜா” திரைப்படம் இந்தியா மட்டுமின்றி சீனாவிலும் பெரிய வரவேற்பு பெற்றது.இதன் வெற்றிக்கு பிறகு அவர் “ஏஸ்” மற்றும் பாண்டிராஜ் இயக்கத்தில் பெயரிடப்படாத புதிய படம் என தொடர்ந்து ஹீரோவாகவே நடித்து வந்தார்.

இந்நிலையில்,தற்போது பிரபாஸ் நடிக்கும் “ஸ்பிரிட்” படத்தில் வில்லனாக விஜய் சேதுபதி நடிக்க உள்ளார் என்ற தகவல் பரவி வருகிறது.இந்தப் படத்தை “அர்ஜுன் ரெட்டி” “அனிமல்” போன்ற படங்களை இயக்கிய சந்தீப் ரெட்டி வங்கா இயக்கி வருகிறார்.இந்த பிரம்மாண்டமான பான் இந்தியா படத்தில்,வில்லனாக நடிக்க விஜய் சேதுபதியிடம் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தகவல்கள் கசிந்துள்ளன.

Mariselvan

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.