சினிமா / TV

பொன் விழா நாயகனுடன் கைகோர்க்கும் கிருத்திகா உதயநிதி.. Comeback கிடைக்குமா?

இயக்குநர் கிருத்திகா உதயநிதியின் அடுத்த படத்தில் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

சென்னை: இயக்குநர் கிருத்திகா உதயநிதி இயக்க உள்ள அடுத்த படத்தில் விஜய் சேதுபதி கதாநாயகனாக நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதற்கான பேச்சுவார்த்தை நடைபெற்று முடிந்துள்ளதாகவும், எனவே, விரைவில் இது தொடர்பான அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

கடந்த 2013ஆம் ஆண்டு வெளியான வணக்கம் சென்னை என்ற படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமான, தமிழக துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் மனைவி கிருத்திகா உதயநிதி, இதற்குப் பிறகு காளி என்ற படத்தை இயக்கினார். பின்னர், பேப்பர் ராக்கெட் என்ற வெப்சீரிசை இயக்கிய கிருத்திகா உதயநிதியின் இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் காதலிக்க நேரமில்லை.

ரவி மோகன், நித்யா மேனன், வினய், யோகி பாபு, லால் மற்றும் லட்சுமி கிருஷ்ணன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான இந்தத் திரைப்படம், பொங்கல் வெளியீடாக கடந்த ஜனவரி 14ஆம் தேதி திரையரங்குகளில் வெளியானது. தன்பாலின ஈர்ப்பு, லிவிங் டுகெதர் ஆகியவற்றை கதைக்களமாக கொண்டு உருவான இந்தத் திரைப்படம், கலவையான விமர்சனங்களை பெற்றது.

இதையும் படிங்க: காவல் நிலையம் முன்பு பிரபல நடிகர் போராட்டம்.. கைது செய்ததால் பரபரப்பு!

மேலும், வெற்றிமாறன் இயக்கத்தில், விஜய் சேதுபதி நடிப்பில் கடைசியாக விடுதலை 2 படம் வெளியாகி, ரசிகர்கள் மற்றும் விமர்சகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்றது. தொடர்ந்து, தற்போது விஜய் சேதுபதி காந்தி டாக்ஸ், ஆஸ் மற்றும் ட்ரெயின் ஆகிய படங்களில் நடித்து வருகிறார்.

இந்த நிலையில், இதுவரை மிர்ச்சி சிவா, விஜய் ஆண்டனி, ரவி மோகன் உள்ளிட்டோருடன் பணியாற்றிய நிலையில், குணச்சித்திரம், வில்லன், கதாநாயகன் என அனைத்து இடங்களிலும் கலக்கி வரும் விஜய் சேதுபதியுடன் கைகோர்ப்பது உறுதி செய்யப்பட்டால், அப்படத்திற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு எழும் என்பது குறிப்பிடத்தக்கது.

Hariharasudhan R

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.