சினிமா / TV

பிக்பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்க இத்தனை கோடியா? சந்தோஷத்தில் மலைத்துப்போன விஜய் சேதுபதி!

விஜய் தொலைக்காட்சியில் கமல்ஹாசன் தொகுத்து வழங்கி மிகப்பெரிய அளவில் பேமஸான நிகழ்ச்சி தான் பிக் பாஸ். இந்த நிகழ்ச்சி கிட்டத்தட்ட 7 சீசன்கள் முடிவடைந்து விட்டது. 7 சீசன்களில் கலந்துக்கொண்ட பல பிரபலங்கள் தங்களுக்கென தனி அடையாளத்தை ஏற்படுத்திக் கொண்டு தற்போது திரைப்படத்துறையில் ஜொலித்துக் கொண்டிருக்கிறார்கள்.

எத்தனையோ திறமைசாலிகளை முகம் அறிய செய்து பிரபலம் ஆக்கிய பெருமை பிக்பாஸ் நிகழ்ச்சிக்கு சேரும். இந்த நிகழ்ச்சியை முதல் சீசனில் இருந்து கடைசி வரை நடிகர் கமல்ஹாசன் தான் தொகுத்து வழங்கினார். ஆனால் சமீபத்தில் இனிமேல் நான் விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் பிக் பாஸ் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கப் போவதில்லை என அதிகாரப்பூர்வமாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு அதிலிருந்து விலகினார் .

இது ரசிகர்களுக்கு அதிருப்தியை ஏற்படுத்தினாலும் அடுத்தது யார் பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்கப் போவார்? என்ற கேள்வி மக்களிடையே சுவாரஸ்யத்தை எழுப்பியது. இதற்கு பதில் அளிக்கும் வகையில் நேற்று விஜய் டிவியில் இருந்து ஒரு அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியது.

அதாவது இந்த 8வது சீசனை விஜய் சேதுபதி தான் தொகுத்து வழங்கப் போவதாக அறிவித்திருந்தார்கள். இதற்கு ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பும் ஆரவாரமும் கிடைத்துள்ளது. இந்த நிலையில் தற்போது சொல்ல வரும் தகவல் என்னவென்றால் நடிகர் விஜய் சேதுபதி பிக் பாஸ் நிகழ்ச்சி தொகுத்து வழங்குவதற்காக ரூ.50 கோடிக்கு மேல் சம்பளம் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக கமல்ஹாசன் இந்த நிகழ்ச்சிக்காக ரூ.120 கோடி முதல் 200 கோடி வரை சம்பளம் வாங்கி இருந்தது குறிப்பிடத்தக்கது.

Anitha

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

1 week ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

1 week ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

1 week ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

1 week ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

1 week ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.