இவரே நெபோடிசம் Product தான்… இதுல இன்னொரு நெபோடிசம் இறக்குறாரு – விஜய் மகனுக்கு வலுக்கும் எதிர்ப்புகள்!

தமிழ் சினிமாவில் முன்னணி ஹீரோவாக இருப்பவர் தளபதி விஜய். இவருக்கு ஒரு மகனும் மகளும் உள்ளது அனைவரும் அறிந்தது. அதில் இவரது மகள் தெறி படத்தில் ஒரு சீனில் நடித்திருப்பார். மேலும், மகன் ஜேசன் சஞ்சய் விரைவில் நடிக்கவிருப்பதாக தகவல் வெளியானது. இவர் கடந்த ஆண்டு சினிமாதுறை சார்ந்த படிப்பை முடித்தார்.

இவர் ஏற்கனவே, தனது தந்தை விஜய்யுடன் இணைந்து வேட்டைக்காரன் படத்தில் கூட நடித்திருந்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், சஞ்சய் தற்போது இயக்குனராக களமிறங்கியுள்ளார். லைக்கா நிறுவனம் தயாரிக்கும் அடுத்த படத்தை இயக்கும் ஒப்பந்தத்தில் சஞ்சய் கையெழுத்திட்ட போட்டோக்களை லைக்கா நிறுவனம் அதிகாரப்பூர்வமாக வெளியிட்டுள்ளது.

மிகப்பெரிய தயாரிப்பு நிறுவனமான லைகா விக்னேஷ் சிவன் போன்ற அனுபவம் உள்ள இயக்குநர்களையே கதை சரி இல்லை என நீக்கியது. அப்படி இருக்கும்போது மிகப்பெரிய நடிகர் விஜய் அவரின் மகன் சஞ்சய் என்ற ஒரே காரணத்துக்காக அவரை நம்பி இவ்வளவு பெரிய பொறுப்பை எதை நம்பி ஒப்படைகிறார்கள் என்ற கேள்வி எழுந்துள்ளது.

அப்போ இனி திரைத்துறையில் திறமைக்கு மரியாதையை இல்லையா? என எல்லோரும் கண்டனம் தெரிவித்துள்ளனர். மேலும் விஜய்யே இயக்குனர் எஸ். ஏ சந்திர சேகர் தன்னுடைய அப்பா என்ற அடையாளத்தில் தான் சினிமாவில் நுழைந்து வளர்ச்சி அடைந்தார். தற்போது இவரின் மகனையும் இறக்குகிறார் என இவரே ஒரு நெபோடிசம் Product தான்… இதுல இன்னொரு நெபோடிசம் இறக்குறாரு என திரைத்துறையில் நடக்கும் அரசியலை விமர்சித்து பலர் கண்டனங்கள் தெரிவித்துள்ளனர்.

Ramya Shree

Recent Posts

சிபிஐ விசாரணை வேணும்.. மக்கள் துயரத்தில் இருக்கும் போது போட்டோஷூட் மூலம் துன்புறுத்துவதா?

அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…

2 weeks ago

தேம்பி தேம்பி அழுத அமைச்சருக்கு ஆஸ்கர் விருதே கொடுக்கலாம்.. அன்புமணி காட்டம்!

விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…

2 weeks ago

கரூர் சம்பவம்.. நடுராத்திரியில் பிரேத பரிசோதனை செய்தது ஏன்? தகவல் சரிபார்ப்பகம் விளக்கம்!

கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…

2 weeks ago

கரூர் சம்பவம்…பிணத்தை வைத்து அரசியல்.. அண்ணாமலை மீது குறை சொல்லும் செல்வப்பெருந்தகை..!!

கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…

2 weeks ago

கரூர் சம்பவத்தில் 41 பேர் பலியாக காரணமே இதுதான்.. ஆதவ் அர்ஜூனா பரபரப்பு குற்றச்சாட்டு!!

கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…

2 weeks ago

விஜய் பேச்சில் மெச்சூரிட்டி… பஞ்ச் இல்லாமல் முதல் பேச்சு.. பாராட்டிய பிரபலம்!!

நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…

2 weeks ago

This website uses cookies.