1990 களில் தமிழ் சினிமாவில் முக்கிய நடிகையாக வலம் வந்த தேவயானி எல்லா ஹீரோக்களுக்கும் பொருந்தும் பொருத்தமான அழகான, பவ்யமான நடிகையாக ரசிகர்களை கவர்ந்தார். அன்றும் இன்றும் என்றும் அழகிய நடிகையாக நம் அனைவரது மனதிலும் நீங்காத இடத்தை பிடித்திருக்கும் தேவயானி குழந்தை போன்ற குணம் கொண்டு கியூட்டான குரலில் பேசுவது அவருக்கே தனி அழகு.
தமிழ், தெலுங்கு மற்றும் மளையாளம் மொழிப் படங்களில் நடித்துள்ள தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை காதலித்து வந்தார். ஆனால் தேவயானியின் காதலுக்கு அவரது தாய் சம்மதம் தெரிவிக்கவில்லை. மேலும், தேவயானி வீட்டில் கடும் எதிர்ப்பு இருந்ததால், பெற்றோர்களை எதிர்த்து நண்பர்கள் முன்னிலையில் ராஜகுமாரனை திருமணம் செய்து கொண்டார். இத்தம்பதியருக்கு இனியா மற்றும் பிரியங்கா என்ற இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், தேவயானியின் மூத்த மகள் இனியா விரைவில் சினிமாவில் என்ட்ரி கொடுக்க உள்ளாராம். விஜயின் மகன் சஞ்சய் தான் இவருக்கு ஜோடியாகவும், நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்தில் இவரை அறிமுகம் செய்ய உள்ளதாகவும், இனியாவின் தந்தையும் இயக்குனர் ராஜ்குமார் அடுத்த பேட்டி ஒன்றில் தெரிவித்துள்ளார்.
நீ வருவாயா படத்தில் முதலில் அஜித் விஜய் இணைந்து நடிக்க இருந்ததாம். ஆனால் விஜய் நடிக்காமல் போக அந்த கதாபாத்திரத்தில் பார்த்திபன் மற்றும் அஜித் நடித்துக் கொடுத்தார்களாம். இந்நிலையில், முதல் பாகத்தில் விஜய் நடிக்கவில்லை என்பதால் நீ வருவாயா படத்தின் இரண்டாம் பாகத்திலாவது அவரது மகனை நடிக்க வைக்க வேண்டும் என்று விஜய்யிடம் நேரடியாக கேட்கப் போவதாகவும், இயக்குனர் ராஜகுமாரன் தெரிவித்துள்ளார்.
நீ வருவாயா இரண்டாம் பாகம் ரெடியாகிவிட்டதாகவும், தற்போது வரை 10 பேரிடம் கதையை கூறி விட்டதாகவும், மேலும் விஜய் மகன் ஒரு கேரக்டரிலும் மற்றொரு கேரக்டரில் இயக்குனர் விக்ரம் மகன் கனிஷ்கா விக்ரம் என்றும் உறுதியாக இயக்குனர் ராஜகுமாரன் சொல்லியுள்ளார்.
2012 ஆம் ஆண்டு நித்யானந்தா மதுரை ஆதீனத்தின் இளைய ஆதீனமாக நியமனம் செய்யப்பட்டார். இந்த நியமனத்தை எதிர்த்து ஆதீன மடத்தின்…
ஆமிர்கான் நடிப்பில் ஆர் எஸ் பிரசன்னா இயக்கத்தில் உருவாகியுள்ள “சித்தாரேஜமீன் பர்” என்ற திரைப்படம் நாளை (ஜூன் 20) திரையரங்குகளில்…
டில்லியில் நடந்த ஒரு புத்தக திருவிழாவில் ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசியுள்ளது தற்போது இணையத்தில் விவாதங்களை கிளப்பியுள்ளது. அவ்விழாவில்…
தக் லைஃப் படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் பேசிய கமல்ஹாசன், தமிழில் இருந்துதான் கன்னடம் பிறந்தது என கூறியது சர்ச்சையை…
சேகர் கம்முலா இயக்கத்தில் தனுஷ், நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா உள்ளிட்ட பலரது நடிப்பில் நாளை ஜூன் 20 உலகம் முழுவதும்…
“எனக்கு மட்டும் அதிகாரம் இருந்தால் 24 மணிநேரமும் டாஸ்மாக்கை திறந்து வைப்பேன்” என ஒரு மேடையில் பேசியுள்ளார் திமுக முன்னாள்…
This website uses cookies.