ஏஐ தொழில் நுட்பம் இன்று அனைவர் மத்தியிலும் பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.இதன் மூலம் நம்மை விட்டு பிரிந்த பலரையும் நம்மால் பார்க்க முடிகிறது.
ரசிகர்கள் மனதில் இன்றும் வாழ்ந்து கொண்டிருக்கும் நடிகர் விஜயகாந்த் அவர்களை 3 திரைப்படங்களில் இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நடிக்க வைத்துள்ளனர்.
வெங்கட் பிரபு இயக்கத்தில் விஜய் நடித்துள்ள கோட் திரைப்படத்திலும் அதையடுத்து விஜயகாந்தின் மகனான சண்முக பாண்டியன் நடித்து வரும் படைத்தலைவன் என்ற படத்திலும் விஜய் மில்டன் இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்திருக்கும் மழை பிடிக்காத மனிதன் படத்திலும் விஜயகாந்த்தை AI தொழில் நுட்பத்தின் மூலம் தோன்றச் செய்துள்ளனர்.
இதுகுறித்து இயக்குனர் விஜய் மில்டன் கூறும்போது, ‛‛மழை பிடிக்காத மனிதன்” படத்தில் விஜயகாந்த் இருக்கிறார். ஆனால் அவர் எப்படி இருப்பார் எப்படி வருவார் என்பதை இப்போதே சொல்ல முடியாது.
மழை பிடிக்காத மனிதன் ஜூலை மாதமே வெளியாவதால் கோட் படத்துக்கு முன்பே இந்த படத்தில் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் பார்க்கலாம். விஜயகாந்த் உடல்நலம் பாதிக்கப்பட்டிருந்த போதே அவரை மழை பிடிக்காத மனிதன் படத்தில் நடிக்க வைக்க முயற்சி செய்தார் விஜய் மில்டன்.ஆனால் அது முடியாமல் போனதால் ஏஐ தொழில் நுட்பத்தின் மூலம் அவரை தனது திரைப்படத்தில் தோன்றச் செய்துள்ளார்.
அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டிற்கு வாய்த்திருக்கும் முதலமைச்சர், எப்படிப்பட்ட பொம்மை முதலமைச்சர் என்பதற்கு இன்று அவர்…
விருதுநகர் மாவட்டம் காரியாபட்டியில் நடைபெற்ற தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் நிகழ்ச்சியின்போது பாமக தலைவர் அன்புமணி ராமதாஸ் செய்தியாளர்களை…
கரூர் கூட்ட நெரிசலில் உயிரிழந்த 39 பேருக்கு எப்படி இரவில் பிரேத பரிசோதனை செய்ய முடியும், 6 மணிக்கு மேல்…
கோவை விமான நிலையத்திற்கு வந்த காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்த செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறியதாவது. இன்று மீண்டும் கரூர்…
கரூர் வேலாயுதம்பாளையத்தில் த.வெ.க. சார்பில் நடைபெற்ற பிரசார கூட்டத்தில், கட்சித் தலைவர் விஜய் பங்கேற்று உரையாற்றிய போது ஏற்பட்ட கூட்ட…
நடிகர் விஜய் தமிழக வெற்றிக் கழகம் என்ற கட்சியை தொடங்கி 2026 தேர்தலில் போட்டியிடுவோம் என அறிவித்தார். அதன்படி முதல்…
This website uses cookies.